Tuesday, May 02, 2006

வாதுவர்பட்டி தந்த விஞ்ஞானகாந்தி

வாதுவர்பட்டி தந்த விஞ்ஞானகாந்தி
ஆசிரியர்: சி. நடராசன் பக். 216 ரூ. 50

அரசியல்வாதி, கலைஞர், சமய குரவர், வணிகர், தமிழாசிரியர் புகழ் பாடுவதில் காட்டும் கவனத்தை அறி வியலாளர் பால் தமிழர் திருப்புவ தில்லை.
சமூகத்தின் ஒரு சாரார் தங்களைத் தாங்களே புகழ்ந்தும் பாராட்டிக் கொண்டும் ஏனையோரை ஒதுக்கு வதும் ஏற்றதல்ல.
சமூகத்தின் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு வகையில் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறார். அந்தப் பங்கைச் சமூகம் முழுமையாக ஏற்கவேண்டு மென ஒவ்வொருவரும் எதிர்பார்க் கின் றனர்.
உலகின் மிக அதிநவீன தொழி னுட்பத்தை, கிரையோசெனிக் எந் திர உருவாக்கத்தை ஒரு தமிழர் உள்ளூரிலேயே குறுகிய காலத்தில் தயாரித்தார். உலக நாடுகளின் உதவி யின்றித் தயாரித்தார். இந்தியா பத்மசிறீ விருது வழங்கிப் பாராட்டி யுள்ளது.
தமிழ்நாட்டில் யார் அறிவார்? கோயில்கட்டுவதற்குத் தமிழ்நாட்டில் பிறக்காத உயிருள்ளோருக்கு முய லும் அறிவிலிகள், தமிழ்நாட்டில் பிறந்து உலகம் வியக்கும் அறிவிய லாளரைத் திரும்பிப் பார்ப்பதில்லை.
இலக்கண வழுக்களுடன் கவி தை என்ற பெயரில் உரைநடை வரிக ளை உடைத்து எழுதும் தமிங்கில நடையாளர், திரை இசைக்குத் தமிழை வளைத்துக் கொடுப்பதால் கவிஞராகிப் பட்டிதொட்டியெங் கும் பரவலாகப் பேசப்படுகிறார்.
தலைப்புக்குப் பொருத்தமின்றி, நகைச்சுவையாகப் பேசும் பட்டிமன் றப் பேச்சாளர் தமிழறிஞர் என உலா வருகிறார்.
துல்லியமாக, அணுவளவும் தவறின்றி, ஏவுகலங்களை விண்வெ ளிக்கு அனுப்பும் அறிவியலாளரைத் தமிழர் பலருக்குத் தெரியாது. பட்டி தொட்டியெங்கும் அவரை அழைத் துப் பாராட்டவேண்டிய கடமை தமிழருக்கு உண்டு.
விருதுநகர் மாவட்டத்தில் அருப் புக்கோட்டைக்கு அருகே, வாதுவர் பட்டியில் பிறந்து, மின்சாரமோ, தெருக்களோ இல்லாத சிற்றூரில் வாழ்ந்து, பல கிமீ. நடந்து பள்ளி சென்று, தமிழ்மொழி மூலம் கல்வி கற்று, பின்னர் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் படித்துப் பொறியியலாளராகி, திறமையின் தளத்தில் விண்வெளி ஆய்வு நிறுவ னத்துக்குத் தெரிவாகி, உலகம் போற் றும் அறிவியலாளராக விளங்குபவர் ஞானகாந்தி.
ஐந்து மொழிகளைக் கற்றவர், பிரான்சில் விருது பெற்றவர், இந் தியாவின் சிறந்த அறிவியலாளர் விருது பெற்றவர், அப்துல் கலா முக்கு உதவியாக இருந்தவர், இந் தியாவின் பத்மசிறீ விருது பெற்ற வர். இவரைத் தமிழகமும் தமிழரும் தலையில் தூக்கிவைத்துக் கொண் டாட வேண்டாமா?
தனிநபர் வழிபாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தில் பகுத்தறிவுப் பார்வை மலரவேண்டும்.
அந்தக் கண்ணோட்டத்துடன் விஞ்ஞானகாந்தி நூலைப் படிக்க வேண்டும். நூல் தயாரிப்பு இதை விட நன்றாக அமைந்திருப்பின் வாச கர் விரும்பிப் போற்றுவர். மலரு மல்ல, நூலுமல்ல எனத் தயாரித் துளர். ஞானகாந்தியின் வெற்றியான வாழ்க்கை ஏனைய தமிழருக்கு வழி காட்டியாகும். அவரைப் பற்றிய நூல்கள் பல வெளிவரவேண்டும்.

0 Comments:

Post a Comment

<< Home