Tuesday, May 02, 2006

அடிமை மோகத்தில் தெபுவிபச

புனேயில் புத்தகக் காட்சி. அறி வித்தலை இந்தியா முழுவதும் அனுப் புகிறார்கள். உலகம் முழுவதும் அனுப் புகிறார்கள்.
புது தில்லியில் உள்ள இந்தியப் பதிப்பாளர் கூட்டமைப்புடன் இணைந்து புத்தகக் காட்சியை நடத் துகிறார்கள்.
அழகாக அமைந்த அறிவித்தலில் ஒரு பக்கத்தில் தேவநாகரி வரிவடி வம், மறுபக்கத்தில் உரோம வரி வடி வம்.
சென்னைப் புத்தகக் காட்சியை நடத்தும் தெபுவிபச கடந்த சில ஆண்டுகளாக விண்ணப்பப் படிவங் களில் சில பகுதிகளைத் தமிழில் சேர்த்துள்ளனர். 2001 தொடக்கம் தமிழில் தரவேண்டும் என வலியு றுத்தும் சில தமிழ்ப் பதிப்பாளரின் கோரிக்கையின் பயன். ஆங்கிலப் பதிப்பாளர் மேலாட்சியில் தெபுவிபச இருந்த காலத்திலேயே தமிழில் படிவங்கள் வரத் தொடங்கின.
கூட்ட அறிவித்தல்கள், கணக்க றிக்கைகள் யாவும் தமிழில் தரவேண் டும் எனப் பொதுக் கூட்டத் தீர்மா னமே உள்ளது.
தமிழுக்கு அமுதென்று பெயர், செந்தமிழ்த் தேன்மொழியாள் என வரிக்கு வரி தமிழை அச்சிட்டுப் பதிப்பிக்கும் தமிழ்ப் பதிப்பாளர் பெரும் எண்ணிக்கையில் உறுப்பு ரிமை பெற்ற தெபுவிபச, உறுப்பி னருக்கு அனுப்பும் கடிதங்கள் ஆங் கிலத்திலேயே உள்ளன.
கடந்த மூன்றாண்டுகளாகத் தெபுவிபசவில் தமிழ்ப் பதிப்பாள ரின் கை ஓங்கியும் தமிழ் மொழி உரிய இடத்தைப் பெறவில்லை.
அடிமை மோகித் தமிழர் ஆட்சி செய்தால் தமிழுக்கு இடமிருக் குமா? புனேப் பதிப்பாளர் விடு தலை பெற்ற இந்தியாவின் இயல்புக் குடிமக்கள். தெபுவிபசவிலோ அடி மை மோகிகளாக இன்னமும் சிலர்.

0 Comments:

Post a Comment

<< Home