Sunday, July 09, 2006

இவை எழுத்து திருட்டாகுமா?

2006 ஏப்பிரல் 7, வெள்ளிக்கிழமை; இலண்டன் மாநகரம்; உயர் நீதி மன்ற வளாகம்; நீதிபதி வருகின்றார்; இருக்கையில் அமர்கின்றார்; 71 பக் கத் தீர்ப்பை வாசிக்கிறார்.
பிறவுணுக்கு மகிழ்ச்சி, பெய்கண் டர் மற்றும் இலே இருவரும் துயரக் கடலில்.
பிறவுணின் முழுப்பெயர் டான் பிறவுண். அவர் கிறித்தவர், கிறித்து மீதும் கிறித்தவ போதனைகள் மீதும் நம்பிக்கை கொண்டவர். விவிலியத் தைப் படித்தவர்.
கிறித்துவின் வாழ்க்கைக் கதை யை விவிலியத்தில் படித்த காலத்திலிருந்தே பிறவுணுக்கு மனதில் ஒரு நெருடல்.
கிறித்துவின் வாழ்க்கையை முழு மையாக எழுதாமல் விட்டுவிட்டனரே என டான் பிறவுண் கருதினார். தானாகக் கள ஆய்வுகள் செய்தார். பயணங்களை மேற்கொண்டார். பலரின் கதவுகளைத் தட்டினார், நூலகங்களுள் நுழைந்து நுவன்றார்.
பிறவுணுக்குத் துணையாக அவரின் மனைவி பிலித்து நின்றார்; இருவரும் படித்த புத்தகங்களுள், பெய்கண்டர் எழுதிய புனிதக் குருதி என்ற நூலும் ஒன்று; இலே எழுதிய திருக்குருதிக்கலம் என்ற நூல் மற் றொன்று. இந்த இரண்டு நூல்களை யும் 1982ஆம் ஆண்டில் வெளியிட் டவர்கள் புகழ்மிக்க இறாண்டம் அவுஸ் பதிப்பகத்தார்.
தனது நீண்ட ஆராய்ச்சியின் விளைவாக, டாவின்ஸின் கோடு என்ற நாவலை 2003 மார்ச்சில் டான் பிறவுண் வெளியிட்டார். இதுவரை அந்த நாவல் 30 மொழிகளில் பெயர்ந் துள்ளன. ஆங்கிலப் பதிப்பு மட் டுமே 4 கோடிப் படிகள் விற்றுத் தீர்ந்தன.
இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு ஆங்கிலத் திரைப்படமும் வெளிவந்து உலகெங்கும் சக்கைபோடு போடுகிறது. தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்து இத்திரைப்படத்தை, வெளியிட முயன்றபொழுது, தமிழ கம் உள்ளிட்ட மாநில அரசுகள் பல, தடை விதித்தன.
பிறவுணை இரு முனைகளிலி ருந்து தாக்கினர்.
1. எழுத்து, கருத்து, வடிவம், ஒழுங் கமைப்பு யாவற்றையும் பிறவுண் திருடினார் என்பது முதல் முனைத் தாக்குதல்.
2. கிறித்து, திருமணம் செய்து கொண்டு, குழந்தைகளைப் பெற்ற தால், அக்குழந்தைகளின் வாரிசுகள் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக் கின்றன என்ற, விவிலியத்தில் கூறப் படாத பிறவுணின் செய்தி, கிறித்தவ மதத்திற்கு மாறான புனைந்துரை என, தீவிரக் கிறித்தவர்கள் பிறவுணை மறுதலித்தனர். இது பிற வுண் மீது ஏவப்பட்ட இரண்டாவது முனைத் தாக்குதல்.
எழுத்து, கருத்து, வடிவம், உட் பொருள் யாவும் 1982 இல் தாம் வெளியிட்ட புனிதக் குருதி மற்றும் திருக்குருதிக்கலம் ஆகிய நூல்க ளில் இருந்து பிறவுண் திருடியவை என இலண்டனின் உயர்நீதி மன்றத் தில் அதன் ஆசிரியர்களான பெய்கண்டரும் இலேயும் வழக்குத் தொடுத்தனர்.
நீண்ட காலம் நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு பிறவுணுக்குச் சாதகமாக அமைந்தது. எழுத்தை யோ, கருத்தையோ, வடிவத்தை யோ, உட்பொருளையோ பிறவுண் அந்த இரு புத்தகங்களிலிருந்தும் திருடவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி தன் தீர்ப்பில் எழுதினார்.
பொய்யும், புரட்டும் விவிலியத் துக்குப் புறம்பானதுமான இந்தப் புனைந்துரையைத் தடை செய்யு மாறு உலகெங்கும் உள்ள தீவிர கிறித்தவர்கள் அரசுகளுக்கும் நீதி மன்றங்களுக்கும் விண்ணப்பித்த னர்.
டாவின்சி கோடு நாவலும் அந் தத் தளத்தில் எழுந்த திரைப்படமும் தடைக்குரியனவல்ல என்று இந் தியா உள்ளிட்ட பல நாடுகள் தீர்ப்ப ளித்தன. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தடை விதித்தன. இந்தியாவில் உள்ள மாநில அரசு கள் சிலவும் தடைவிதித்தன.
ஆங்கிலத்திலும் பிற மொழிக ளிலுமாக இந்த நாவலும் திரைப் படமும் விற்பனையில் சாதனை களை ஏற்படுத்தின.
விவிலியச் செய்திக்கும், பிறவு ணின் புனைந்துரைக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை ஆராய இங்கு நான் விரும்பவில்லை.
ஆனாலும், எழுத்துத் திருட்டு வரலாற்றில் திருப்புமுனைத் தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் பிற வுணை விடுவித்ததின் காரணத்தை ஆராய விரும்புகிறேன்.
பிறக்கும் போது எவரும் எழுதிக் கொண்டே பிறப்பதில்லை.
எந்த எழுத்தும் முன்பிருந்த படைப்பாளி அல்லது எழுத்தாள ரின் பாதிப் பைப் பெற் றிருப்பது இயல்பு. அவ்வாறாயின், எவரின் எழுத்தும் தனித்துவமான தென்று கருதாதிருப்பதும் முறை ஆகாது.
ஐந்தும் ஐந்தும் பத்து என்பது நமக்கு யாரோ சொல்லித் தந்தது தான்.
அதைப் போன்ற ஏராளமான சூத்திரங்களை எழுதும் போது ஒவ்வொரு முறையும் இன்னார் சொல்லிய சூத்திரம் என எழுத முடியுமா?
சுழியம் (0) தமிழர் உலகுக்கு தந்த மூலப் பொருள் என ஒவ்வொரு சுழியத்துக்குப் பின்னும் அடிக்கு றிப்பு எழுதிக் கொண்டிருக்க முடி யாது. இவை அனைவரும் அறிந்த பொதுநிலைகள்.
ஒருவரின் கவனத்துக்கு வந்த வை, ஒருவர் அநுபவித்தவை, ஒருவரின் சுய சிந்தனையில் எழுபவை, கண்டுபிடித்தவை பற்றிய எழுத்து கள் திருட்டாக முடியுமா? முடியாது.
களஆய்வு செய்து, தகவல்களைக் குறித்து வைத்து, அவற்றை ஆய்வு கூடத்திற்கு எடுத்து வந்து, பகுத்து, வகுத்து, தொகுத்து, திரட்டி, ஒழுங் கமைத்து எழுத்தாக்குவது எழுத்துத் திருட்டாகாது.
புத்தகங்களைப் படிக்கிறோம், அவற்றை மனதில் பதியவைக்கி றோம், மனப்பாடம் செய்கிறோம். நாம் எழுதும் போது மனத்தில் புகைப் படமாகப் பதிந்த அந்தச் செய்திகள், கருத்துகள், வடிவமைப்புகள், உள் பொருள்கள் எம்மை அறியாமலே எமது எழுத்துள் புகுகின்றன.
முண்டாசுக் கவிஞன் பாரதியின் வரிகள், பாரதிதாசனின் வரிகள் கவியரசு கண்ணதாசனின் வரிகள், இன்றுள்ள பலரில் பாதிப்பை ஏற்ப டுத் த, முன்ன வர்களின் சாயல் பின் வந்தோரின் படைப்புகளில் நன்றாகவே தெரியும்.
அது போலவே பாரதியும், பாரதி தாசனும், கண்ணதாசனும் முன்னோர் விட்டுச் சென்ற நாட்டுப்புற பாடல் களால், பழமொழிகளால் பாதிப்புற் றனர். இவை எழுத்து திருட்டாகுமா? இல்லை.
எழுத்துக்கு எழுத்து, சொல்லுக் குச் சொல், வரிக்கு வரி, பத்திக்குப் பத்தி அப்படியே இன்னொருவரின் எழுத்தை, படைப்பை, இசையை, திரைப்படத்தை, மென்பொருளை எடுத்து, தமது படைப்புக்குள் தமது நாவலுக்குள் எங்கிருந்து எடுத்தோம் எனத் தெரிவிக்காமல் உள்ளடக்கு வதே எழுத் துத் திருட்டு.
அந்த எழுத்து எப் பொழுது எங் கே எப் பெயரில் எத் தலைப்பில் யாரால் எவ்விடத்தில் எழுதிப் பதிப் பிக்கப் பெற்றது என்ற குறிப்பை, அடிக்குறிப்பாக மேற்கோள் குறியீ டாகக் காட்ட வேண்டிய கடமை ஒவ் வொரு எழுத்தாளருக்கும் உண்டு. அப்படிக் காட்டினால் அது எழுத்துத் திருட்டு ஆகாது.
ஒரு வரியையோ, பாட்டின் இரு வரிகளையோ, கவிதை முழுவதையுமோ, உரைநடைப் பத்தியையோ மேற்கோள்குறிப்பு அல்லது அடிக் குறிப்புடன் வெளியிடுவதே படைப்பாளிக்கும் மதிப்பு, முன்பு எழுதியவருக்கும் மதிப்பு.
மேற்கோள் குறிப்பையும், அடிக் குறிப்பையும்வெளியிடுகிறோமே என்பதால், பக்கம் பக்கமாகப் பெயர்தது வெளியிடலாம் என ஒருவர் கருதி, தன்னுடைய எழுத்தை இடையிடை சேர்த்து எழுதினால் அஃது அப்பட்டமான எழுத்துத் திருட் டாகும்.
படித்தேன், பாதிப்பு இருந்தது, புகைப்படமாய் மனதில் பதிந்தது, எழுதும்போது அப்படியே வந்தது, எழுதினேன் என்ற காவியா விசுவநாதனின் விளக்கத்தை எவரும் ஏற்க மறுக்கின்றனர்.
ஒரே கருவாக இருப்பினும் வெவ்வேறு முயற்சிகளின் பெறுபேறாக இருப்பதால், பெய்கண்டரோ, இலேயோ, டான் பிறவுணோ ஒருவரின் எழுத்தை மற்றவர் திருடவில்லை என நீதிமன்றமே தீர்த்தது.
அமெரிக்காவிலும் டான் பிறவுண் வழக்குகளைச் சந்தித்தார். கடவுளின் பெண் மகவு என்ற தலைப்பில் உலூவி பேர்டியூ எழுதி, 1999இல் வெளிவந்த நாவலை ஒட்டியே டான் பிறவுண் எழுதினார் எ ன்ற வழக்கிலும் டாண் பிறவுணுக்குச் சாதகமாகவே தீர்ப்பு வழங்கினர்.
தொடக்க காலக் கிறித்துவ சமயத்தில் பெண்களின் புனிதத் தன்மை யை நிரூபிப்பதே இரு நாவல்களிலும் கரு.
கிறித்துவுக்கு மனைவி இருந்தார் என்பதை விவிலியம் எழுதிய காலத்திலிருந்தே மறைத்து வந்துள்ளதை இரு நூல்களும் ஒரே மாதிரி அமைத்திருந்தன.
ஓவியங்களில் மறைபொருளாக உண்மை புதைந்திருந்ததும் அந்த ஓவிய முடிச்சை அவிழ்ப்பதே இரு நாவல்களிலும் போக்காக இருந்தது.
இரு நாவல்களிலும் நெடுங்கதை ஒன்று, துணைக் கதை ஒன்று என இரு கதைகளாக ஒரே திசையில் வாசகரை அழைத்துச் சென்றன.
கத்தோலிக்க திருச்சபையின் தீவிரவாதிகள் சிலர், இரகசியத்தைக் காத்தவரைக் கொலை செய்ய முயன்றதையும் இரு நாவல்களும் எழுதின.
இவ்வளவு ஒற்றுமைகள் கடவுளின் பெண் மகவுக்கும் டாவின்சி கோடுவுக்கும் இருந்தும் டான் பிறவுண் எழுத்துத் திருட்டைச் செய்யவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்த்தமைக்கு, டான் பிறவுணின் மூல எழுத்து அப்பழுக்கற்ற சொந்தத் தயாரிப்பாக, கள ஆய்வுகளின் பெறுபேறாக இருந்ததே காரணமாகும்.

0 Comments:

Post a Comment

<< Home