Tuesday, May 02, 2006

அடிமை மோகத்தில் தெபுவிபச

புனேயில் புத்தகக் காட்சி. அறி வித்தலை இந்தியா முழுவதும் அனுப் புகிறார்கள். உலகம் முழுவதும் அனுப் புகிறார்கள்.
புது தில்லியில் உள்ள இந்தியப் பதிப்பாளர் கூட்டமைப்புடன் இணைந்து புத்தகக் காட்சியை நடத் துகிறார்கள்.
அழகாக அமைந்த அறிவித்தலில் ஒரு பக்கத்தில் தேவநாகரி வரிவடி வம், மறுபக்கத்தில் உரோம வரி வடி வம்.
சென்னைப் புத்தகக் காட்சியை நடத்தும் தெபுவிபச கடந்த சில ஆண்டுகளாக விண்ணப்பப் படிவங் களில் சில பகுதிகளைத் தமிழில் சேர்த்துள்ளனர். 2001 தொடக்கம் தமிழில் தரவேண்டும் என வலியு றுத்தும் சில தமிழ்ப் பதிப்பாளரின் கோரிக்கையின் பயன். ஆங்கிலப் பதிப்பாளர் மேலாட்சியில் தெபுவிபச இருந்த காலத்திலேயே தமிழில் படிவங்கள் வரத் தொடங்கின.
கூட்ட அறிவித்தல்கள், கணக்க றிக்கைகள் யாவும் தமிழில் தரவேண் டும் எனப் பொதுக் கூட்டத் தீர்மா னமே உள்ளது.
தமிழுக்கு அமுதென்று பெயர், செந்தமிழ்த் தேன்மொழியாள் என வரிக்கு வரி தமிழை அச்சிட்டுப் பதிப்பிக்கும் தமிழ்ப் பதிப்பாளர் பெரும் எண்ணிக்கையில் உறுப்பு ரிமை பெற்ற தெபுவிபச, உறுப்பி னருக்கு அனுப்பும் கடிதங்கள் ஆங் கிலத்திலேயே உள்ளன.
கடந்த மூன்றாண்டுகளாகத் தெபுவிபசவில் தமிழ்ப் பதிப்பாள ரின் கை ஓங்கியும் தமிழ் மொழி உரிய இடத்தைப் பெறவில்லை.
அடிமை மோகித் தமிழர் ஆட்சி செய்தால் தமிழுக்கு இடமிருக் குமா? புனேப் பதிப்பாளர் விடு தலை பெற்ற இந்தியாவின் இயல்புக் குடிமக்கள். தெபுவிபசவிலோ அடி மை மோகிகளாக இன்னமும் சிலர்.

வாதுவர்பட்டி தந்த விஞ்ஞானகாந்தி

வாதுவர்பட்டி தந்த விஞ்ஞானகாந்தி
ஆசிரியர்: சி. நடராசன் பக். 216 ரூ. 50

அரசியல்வாதி, கலைஞர், சமய குரவர், வணிகர், தமிழாசிரியர் புகழ் பாடுவதில் காட்டும் கவனத்தை அறி வியலாளர் பால் தமிழர் திருப்புவ தில்லை.
சமூகத்தின் ஒரு சாரார் தங்களைத் தாங்களே புகழ்ந்தும் பாராட்டிக் கொண்டும் ஏனையோரை ஒதுக்கு வதும் ஏற்றதல்ல.
சமூகத்தின் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு வகையில் வளர்ச்சிக்குப் பங்களிக்கிறார். அந்தப் பங்கைச் சமூகம் முழுமையாக ஏற்கவேண்டு மென ஒவ்வொருவரும் எதிர்பார்க் கின் றனர்.
உலகின் மிக அதிநவீன தொழி னுட்பத்தை, கிரையோசெனிக் எந் திர உருவாக்கத்தை ஒரு தமிழர் உள்ளூரிலேயே குறுகிய காலத்தில் தயாரித்தார். உலக நாடுகளின் உதவி யின்றித் தயாரித்தார். இந்தியா பத்மசிறீ விருது வழங்கிப் பாராட்டி யுள்ளது.
தமிழ்நாட்டில் யார் அறிவார்? கோயில்கட்டுவதற்குத் தமிழ்நாட்டில் பிறக்காத உயிருள்ளோருக்கு முய லும் அறிவிலிகள், தமிழ்நாட்டில் பிறந்து உலகம் வியக்கும் அறிவிய லாளரைத் திரும்பிப் பார்ப்பதில்லை.
இலக்கண வழுக்களுடன் கவி தை என்ற பெயரில் உரைநடை வரிக ளை உடைத்து எழுதும் தமிங்கில நடையாளர், திரை இசைக்குத் தமிழை வளைத்துக் கொடுப்பதால் கவிஞராகிப் பட்டிதொட்டியெங் கும் பரவலாகப் பேசப்படுகிறார்.
தலைப்புக்குப் பொருத்தமின்றி, நகைச்சுவையாகப் பேசும் பட்டிமன் றப் பேச்சாளர் தமிழறிஞர் என உலா வருகிறார்.
துல்லியமாக, அணுவளவும் தவறின்றி, ஏவுகலங்களை விண்வெ ளிக்கு அனுப்பும் அறிவியலாளரைத் தமிழர் பலருக்குத் தெரியாது. பட்டி தொட்டியெங்கும் அவரை அழைத் துப் பாராட்டவேண்டிய கடமை தமிழருக்கு உண்டு.
விருதுநகர் மாவட்டத்தில் அருப் புக்கோட்டைக்கு அருகே, வாதுவர் பட்டியில் பிறந்து, மின்சாரமோ, தெருக்களோ இல்லாத சிற்றூரில் வாழ்ந்து, பல கிமீ. நடந்து பள்ளி சென்று, தமிழ்மொழி மூலம் கல்வி கற்று, பின்னர் மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் படித்துப் பொறியியலாளராகி, திறமையின் தளத்தில் விண்வெளி ஆய்வு நிறுவ னத்துக்குத் தெரிவாகி, உலகம் போற் றும் அறிவியலாளராக விளங்குபவர் ஞானகாந்தி.
ஐந்து மொழிகளைக் கற்றவர், பிரான்சில் விருது பெற்றவர், இந் தியாவின் சிறந்த அறிவியலாளர் விருது பெற்றவர், அப்துல் கலா முக்கு உதவியாக இருந்தவர், இந் தியாவின் பத்மசிறீ விருது பெற்ற வர். இவரைத் தமிழகமும் தமிழரும் தலையில் தூக்கிவைத்துக் கொண் டாட வேண்டாமா?
தனிநபர் வழிபாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தில் பகுத்தறிவுப் பார்வை மலரவேண்டும்.
அந்தக் கண்ணோட்டத்துடன் விஞ்ஞானகாந்தி நூலைப் படிக்க வேண்டும். நூல் தயாரிப்பு இதை விட நன்றாக அமைந்திருப்பின் வாச கர் விரும்பிப் போற்றுவர். மலரு மல்ல, நூலுமல்ல எனத் தயாரித் துளர். ஞானகாந்தியின் வெற்றியான வாழ்க்கை ஏனைய தமிழருக்கு வழி காட்டியாகும். அவரைப் பற்றிய நூல்கள் பல வெளிவரவேண்டும்.

மின்னம்பல தளம் ஒன்றின் ஐந்தாண்டு வரலாறு (1999-2004)

இணையத்தில்
தமிழ்ப் புத்தக விற்பனை
மின்னம்பல தளம் ஒன்றின்
ஐந்தாண்டு வரலாறு (1999-2004)


ந. சசிரேகா
மேலாளர், காந்தளகம் - சென்னை

தமிழ்நூல்.காம் - 5 ஆண்டுகள்
1. பின்னணி:
கணிப்பொறி ஒன்றில் இருந்து மற்றொன்றுக்குச் செய்திகளைப் பரிமாறும் முயற்சியில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவியலாளர் முதன் முதலாக வெற்றிபெற்றனர்.
அன்று தொடங்கிய பணி விரிந்து வளர்ந்தது. உலகளாவிய அளவில் கணிப் பொறிகளிடையே செய்திகளைப் பரிமாறும் வகையில் இணைக்கும் வலைப் பின்னல் எழுந்தது. வளர்ச்சிக்கு வாய்ப்பான வகையிலேயே அவ்வலைப் பின்னல் இணையமாகியுள்ளது.
மனித சமூகத்திற்குக் கிடைத்துள்ள மாபெரும் கொடையே இணையம். தகவல் பரிமாற்றத்திற்கும் விரைந்த தொடர்பிற்கும் சிறந்த தளமேடையே இணையம்.
உலகின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு, மற்றொரு மூலையில் கிடைக்கும் தகவல்களைப் பெறலாம்; நிகழும் நிகழ்ச்சிகளை அறியலாம்; உற்பத்தியாகும் பொருள்களை வாங் கலாம்; இணையத்தின் இத்தகைய வலிமைகளை இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.
பன்முக ஆற்றல்வாய்ந்த இணையம், தமிழ்கூறும் நல்லுலகுக்குப் பயன் தரவேண்டும் என எண்ணினோம்; முயற்சியில் ஈடுபட்டோம்; விளைவு தமிழ்நூல்.காம் (tamilnool.com) இணையதளம்.
25 ஆண்டுகளாகத் தமிழ்ப் புத்தகப் பதிப்பு மற்றும் விற்பனையில் காந் தளகம் ஈடுபட்டு வருகிறது; தமிழ் நூல்.காம் மூலம் 1998ஆம் ஆண்டு மார்கழி நடுப்பகுதியில் இணையத் துள் காந்தளகம் தன் காலடியைப் பதித்தது.
2. நோக்கம்:
ஏறத்தாழ 5,000 புதிய தமிழ்த் தலைப்புகளை உலகெங்கும் உள்ள 2,000க்கும் அதிகமான தமிழ்ப் பதிப்பாளர்கள் ஓராண்டில் வெளியிடு கின்றனர். அத்துடன் ஏறத்தாழ 1,500 தமிழ்த் தலைப்புகள் ஒவ்வோர் ஆண்டும் மறுபதிப்பாகின்றன. ஏறத் தாழ 36,000 தமிழ்த் தலைப்புகள் எப்பொழுதும் விற்பனைக்காகப் பதிப்பாளரிடம் இருக்கும்.
விற்பனைக்குள்ள தமிழ் நூல்கள் அனைத்தும், ஒரே கூரையின் கீழ், உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் களுக்குக் கிடைக்க வேண்டும் என் பதே தமிழ்நூல்.காம்இன் தலையாய நோக்கம்.
பதிப்பாளரின் விற்பனைப் பட்டியல் களைத் திரட்டினோம். விற்பனைக் குள்ள 12,000 தலைப்புகளைத் தரவுத் தளத்துள் அமைத்தோம். 1999 பொங்கல் நாளன்று இணையதளத்தில் இவற்றை உலவ விட்டோம்.
ஐந்து ஆண்டுகளின் பின், இப்பொ ழுது, 36,000க்கும் அதிகமான தலைப் புகளை, 82 பாடவகைகளாகப் பட்டிய லிட்டுத் தளத்தில் அமைத்துள்ளோம். இணையத்துள் உலாவி, இத்தனை எண்ணிக்கையுள்ள தலைப்புகளைத் தேடித் தெரிந்து வாங்கக் கூடிய, மிகப் பெரிய தமிழ்நூல் அங்காடி தமிழ் நூல்.காம் ஒன்றுதான். இத்துடன் நின்றுவிடவில்லை, வளர்ந்து வருகி றோம்.
3. வரலாறு - இயக்கம்
36,000 தலைப்புகளைத் திரட்டுவது எளிதான பணியல்ல. உலகெங்கும் உள்ள 2,000க்கும் அதிகமான தமிழ்ப் பதிப்பாளர்களின் முகவரிகளைத் திரட்டினோம். அவர்களுக்கு எமது பணியை விளக்கிக் கடிதம் எழுதி னோம். அவர்களின் விலைப்பட்டி யல்களைப் பெற்றோம்.
தலைப்பு வாரியாக, பாடவகை வாரி யாக, ஆசிரியர் வாரியாக, பதிப்பாளர் வாரியாக, பதிப்பு ஆண்டு வாரியாக, அகரவரிசையாக்கக் கூடிய மென் பொருளைத் தேடி வாங்கினோம்.
புத்தகத்தின் பெயர், ஆசிரியர், பக்கங் கள், பதிப்பு ஆண்டு, விலை, பதிப்பா ளர் பெயர், முகவரி, பாட வகை ஆகிய தரவுகளைக் கணிப் பொறியுள் இட் டோம். இதற்காக ஈராண்டுகள் கடுமை யாக உழைத்தோம்.
தலைப்புகளைப் பாடவகையாக, அதற்குள் ஆசிரியர் வாரியாக, அகர வரிசையாக்கி இணையத்தில் வெளி யிட்டோம்.
வாரந்தோறும், நாள்தோறும் வெளி யாகும் புதிய தமிழ்ப் புத்தகங்களின் விவரங்களை தமிழ்நூல்.காம் தரவுத் தளத்தில் சேர்த்தோம்; அடிக்கடி அதைப் புதுப்பித்து வந்தோம். தொடர்ந்து புதுப்பித்து வருகிறோம். தமிழகத்திலும் புதுவையிலும் வெளி யாகும் நூல்களுடன், உலகெங்கிலும் வெளியாகும் தமிழ் நூல்களின் விவ ரங்களையும் இத்தளத்தில் சேர்த்து வருகிறோம்.
3.1 பாடவகைத் தேடல்:
முதலில் 40 பாடவகைகளாகத் தலைப் புகளைப் வகுத்திருந்தோம். திருக் குறள் தொடர்பான நூல்கள் இலக் கியப் பிரிவுள் வந்தன. காலப் போக்கில் திருக்குறள் தொடர்பான தலைப்புகளே ஐநூறு வரை சேர்ந்தன. வாடிக்கையாளர்களின் வசதியைக் கருதித் திருக்குறளைத் தனிப் பாடவகையாக்கினோம். பாடவகைப் பட்டியல் இவ்வாறு நீண்டது; யாப்பு, சங்ககாலம், இந்து, இஸ்லாம், கிறித் தவம், சைவம், வைணவம் என விரிந்து, 82 பாடவகைகளானது.
திருக்குறள் தொடர்பான நூல்களைத் தேட விரும்பும் வாடிக்கையாளர், பாடவகைத் தேடல் பகுதியில் உள்ள 82 பாடவகைகளின் பட்டியலில், திருக்குறளைத் தெரிவு செய்து, தேடுக என்னும் குமிழைச் சொடுக் கினால், திருக்குறள் தொடர்பான ஐநூறு வரையான தலைப்புகளின் பட்டியல் வரும்.
அவ்வாறே இந்த 82 பாடவகை களிலும் உள்ள தலைப்புகளின் பட்டியலைத் தனித்தனியாகத் தேடிப் பெறலாம்.
3.2 தட்டச்சுத் தேடல்:
ஆசிரியர் வாரியாகவோ, தலைப்பு வாரியாகவோ நூல்களைத் தேட வாசகர் விரும்புவர்; எனவே இந்த வசதியையும் ஏற்படுத்த எண்ணி னோம். தட்டச்சுத் தேடல் என்ற புதிய பிரிவை அமைத்தோம். தமிழ்த் தட்டச்சு விசைப் பலகை திரையில் தெரியுமாறு வடிவமைத்தோம். இவ் விசைப் பலகையைப் பயன்படுத்தி, எந்த ஒரு நூலின் தலைப்பையோ, எந்த ஒரு ஆசிரியரின் பெயரையோ தமிழிலேயே தட்டச்சுச் செய்து தேடலாம். இவ்விசைப்பலகையை இயக்க உதவும் உதவிப் பெட்டியும் அத்திரையிலேயே தெரியும்.
ஒரு சொல்லையோ, அச்சொல்லின் எழுத்துகள் சிலவற்றையோ, தட்டச்சுச் செய்து, தலைப்பு எனும் குமிழைச் சொடுக்கினால், நூலின் தலைப்பில் எங்கெல்லாம் (பகுதி, இடைநிலை, விகுதி) அச்சொல் அல்லது அச்சொல் லின் எழுத்துகள் சில வருகின் றனவோ, அந்தந்த நூல்களின் தலைப் புகள் திரையில் வரும்.
அதே போல, ஆசிரியரின் பெய ரையோ அல்லது பெயரின் எழுத் துகள் சிலவற்றையோ தட்டச்சுச் செய்து, ஆசிரியர் எனும் குமிழைச் சொடுக்கினால், நூலாசிரியரின் பெயரில் எங்கெல்லாம் (பகுதி, இடைநிலை, விகுதி) அச்சொல் அல்லது அச்சொல்லின் எழுத்துகள் சில வருகின்றனவோ, அந்தந்த ஆசிரியர் பெயர்கள் திரையில் வரும்.
அதே போல, பாடவகையின் பெய ரையோ அல்லது பெயரின் எழுத்து கள் சிலவற்றையோ தட்டச்சுச் செய்து, பாடவகை எனும் குமிழைச் சொடுக்கி னால், பாடவகையின் பெயரில் எங்கெல்லாம் (பகுதி, இடை நிலை, விகுதி) அச்சொல் அல்லது அச்சொல் லின் எழுத்துகள் சில வருகின்ற னவோ, அந்தந்தப் பாடவகைகள் திரையில் வரும்.
ஒரு சொல்லையோ, அச்சொல்லின் எழுத்துகள் சிலவற்றையோ, தட்டச்சுச் செய்து, தேடுக எனும் குமிழைச் சொடுக்கினால், தலைப்பு, ஆசிரியர், பாடவகை ஆகிய மூன்று நீள்பத்தி களிலும் எங்கெல்லாம் (பகுதி, இடை நிலை, விகுதி) அச்சொல் அல்லது அச்சொல்லின் எழுத்துகள் சில வருகின்றனவோ, அந்தந்த நூல்களின் தலைப்புகள் திரையில் வரும்.
3.3 ஆசிரியர்-பாடவகை எளிய தேடல்
மிக விரிவான தேடல் வசதியைத் தமிழ்நூல்.காம் இணைய தளத்தில் வழங்கியுள்ளோம். எடுத்துக் காட் டாக, பாடவகைத் தேடல் மூலம் ஒரு பாடவகையின் தலைப்புகளைத் தேடிச் சொடுக்கினால், திரையில் அப் பாடவகைப் பட்டியல் தெரிகிறது. அப்பட்டியலில்,இடம்பெறும் ஆசி ரியர்களுள் எவராவது ஒருவர் எழுதிய அனைத்துத் தலைப்புகளை யும் அறிய விரும்புவோர், அவ்வா சிரியரின் பெயரைச் சொடுக்க வேண்டும். உடனே அந்த ஆசிரியர் எழுதிய நூல்களின் பட்டியல் திரை யில் தெரிகின்றது.
திரையில் தெரிகின்ற பட்டியலில் பல்வேறு பாடவகைகள் தெரிகின்றன. அவற்றுள் ஒரு பாடவகையின் தலைப்புகளை அறிய விரும்புவோர், அப்பாடவகையை அங்கிருந்தே சொடுக்க, அப்பாடவகைக்கான பட்டியல் திரையில் தெரிகிறது.
3.4 கூடைக்குள் சேர்க்கும் வசதி:
தேடலின் விளைவாக, வாடிக்கை யாளர் தமக்குத் தேவையான தலைப் புகளைத் தெரிவு செய்கிறார். அவ் வாறு தேடித் தெரிந்த தலைப்புகளின் பட்டியலை எளிதில் உருவாக்க, கூடைக்குள் சேர்க்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளோம்.
வாடிக்கையாளர் தமக்குத் தேவை யான தலைப்புகளை ஒவ்வொன்றா கக் கூடைக்குள் சேர்த்துக் கொள்ளலாம். தேடிக்கொண்டிருக் கையிலோ, தேடித் தெரிவு செய்து முடிந்ததுமோ, கூடையைச் சரி பார்க்க எனும் குமிழைச் சொடுக்கிக் கூடைக்குள் செல்லலாம். வேண்டா தன நீக்கலாம்; படிகளின் எண்ணிக் கையைக் குறைக்கலாம், அதிகரிக் கலாம்.
திருத்தங்கள் முடிந்ததும், தொடர்ந் தும் தேடலாம், தலைப்புகளைத் தெரிவு செய்யலாம், கூடைக்குள் சேர்க்கலாம். புத்தகத் தேவைகள் இப்போதைக்கு நிறைவானது என்ற தும், கூடையைச் சரி பார்க்க எனும் குமிழைச் சொடுக்கிக் கூடைக்குள் சென்று, வலியுறுத்துக என்னும் குமி ழைச் சொடுக்கி உறுதி செய்யலாம்.
தெரிவு செய்த தலைப்புகளும், அவற் றின் விலைகளின் கூட்டுத் தொகை யும் திரையில் தெரியும். பட்டியலை மின்னஞ்சல் இணைப்பாக எமக்கு அனுப்பலாம்.
அப்பட்டியலில் உள்ள நூல்கள் இருப்பில் உளவா? அதே விலையில் கிடைக்கின்றனவா? என்பதை உசாவித் தெளிவோம். இருப்பில் உள்ள தலைப்புகளுக்கு உரிய விலைகளின் கூட்டுத் தொகையை யும், வானூர்தி வழியாகவோ, கடல் வழியாகவோ, அஞ்சலாகவோ, பொதியாகவோ அனுப்பும் செலவை யும் சேர்த்து வாடிக்கையாளருக்குத் தெரிவிப்போம். வாடிக்கையாளரிட மிருந்து பணத்தைப் பெற்றதும், அவ ரது ஆணைக்கமைய உரிய முகவரிக்கு நூல்களை அனுப்புவோம்; அவர் நூல்களைப் பெற்றுக்கொண்டதைக் காலப்போக்கில் உறுதி செய்து கொள்வோம்.
3.5 கடன் அட்டை வசதி வழங்குவதிலுள்ள சிக்கல்:
கடன் அட்டை மூலம் பணம் செலுத் தும் வசதியை வாடிக்கையாளர் விரும்புகின்றனர். சிறப்பாக, வெளி நாடுகளில் உள்ளோர் பலர் அத்தகைய பழக்கங்களைக் கொண்டவராதலின் கடன் அட்டை மூலம் வாங்கும் வசதி இல்லையெனில் சோர்வடைகின்றனர்.
எனினும், பாதுகாப்புச் சிக்கல்களைக் கருத்தில் கொண்ட சில வெளிநாட்ட வர், கடன் அட்டை மூலம் பணம் செலுத்த விரும்பவில்லை எனச் சொல்வதுமுண்டு.
கடன் அட்டை வசதியை அறிமுகம் செய்ய முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், விற்பனைக்குரிய புத்தகங்களின் இருப்புத் தொடர்பான நடைமுறைச் சிக்கலே.
36,000க்கும் அதிகமான தமிழ்த் தலைப்புகளின் நாளாந்த இருப்பு நிலையைக் கண்காணிப்பது நடை முறையில் சாத்தியமில்லை. பதிப்பக விலைப் பட்டியல்களின் அடிப்படை யில், தலைப்புகளின் இருப்பையோ விலையையோ சொல்லிவிட இய லாது.
விலைப்பட்டியலில் உள்ள ஒரு தலைப்பு, விற்றுத் தீர்ந்திருக்கலாம், அத்தலைப்பின் விலை உயர்ந்திருக் கலாம். இருப்பிலும் விலையிலும் உள்ள மாற்றங்களைப் தமிழ்ப் பதிப் பகங்கள் உடனுக்குடன் வெளியிடு வது மிகக் மிகக் குறைவு.
இதனால் ஒவ்வொரு ஆணைப்பட் டியலில் உள்ள தலைப்புகளின் இருப் பையும் விலையையும் உசாவி, கூறு விலையை வாடிக்கையாளருக்கு அனுப்ப வேண்டியதே மெய்நிலை.
உசாவிய பின், கூறுவிலையை அனுப் புகிறோம்; பணம் வந்து சேர்கிறது; புத்தகங்களை வாங்கப் பதிப்பகங் களுக்குப் போகிறோம்; சில தலைப் புகள் இருப்பில் இல்லை அல்லது அவற்றின் விலையை அதிகரித்து விட்டோம் எனப் பதிப்பாளர் கூறும் நிலை தவிர்க்க முடியாதது.
தவிர்க்க முடியாத இந்த இருப்பு/விலைச் சூழ்நிலை ஏற்பட்டால், கடன் அட்டை மூலம் முற்பணமாகக் கூறு விலையைப் பெற்றிருந்தால், வாடிக் கையாளருக்கு என்ன பதில் சொல்ல முடியும்? பணம் பெற்ற பின், அவர் கேட்ட நூல் இல்லை என்று சொல்வது முறையா? வாடிக்கையாளரிடம் நம்ப கத்தன்மை போய்விடுமே!
புகழ் பெற்ற, இருப்பில் எப்பொழு தும் இருக்கின்ற, ஒருசில தலைப்பு களை மட்டும் தமிழ்நூல்.காம்இல் தொகுத்திருந்தால் கடன் அட்டை வசதியை அமைத்திருக்கலாம். ஆனால் நாமோ 1,500க்கும் அதிக மான பதிப்பகங்கள் வெளியிட்ட, 36,000க்கும் அதிக எண்ணிக்கை யிலான தமிழ்த் தலைப்புகளைத் தொகுத்து, 82க்கும் அதிகமான பாட வகைகளாக வகுத்து, வாசகருக்குப் பரந்த தேடல் வசதியை ஏற்படுத்தி, முழுமையான தமிழ்ப் புத்தகக் கடை யை வாடிக்கையாளரின் வீட்டுக்குள் அமைத்திருக்கிறோமே!
தமிழ்ப் பதிப்புத் தொழில் உலகம் வளர்ந்து, இருப்பு நிலையையும், விலை மாற்றங்களை அவ்வப்பொ ழுது அறிவிக்கும் காலம் வருமா? தமிழ்ப் பதிப்புத் தொழில் உலகத்துக்கு மட்டும் உரிய சிக்கல் இஃதன்று. அனைத்து மொழிப் புத்தக வணிகத் துக்கும் பொதுவான இச்சிக்கலுக்குத் தீர்வு வேண்டும்.
இச்சிக்கல்களைக் கடந்து, கடன் அட்டை வசதியை அமைக்கும் வாய்ப் புகளை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் இதற்கு விடை காண்போம்.
3.6 தமிழ்க் குறுந்தட்டுகள் - தமிழியல் நூல்கள்
தமிழில் வெளியாகியுள்ள குறுந்தட்டு களின் பட்டியலும் தமிழியல் (தமிழ் சார்ந்த ஆங்கில - tamilology) நூல் களின் பட்டியலும் தமிழ்நூல்.காம் இல் உள்ளன.
3.7 பதிப்புத் தொழில் உலகம்
தமிழகத்தின் பதிப்புத் தொழில் வளர்ச்சியை நோக்கிய திங்களிதழ், பதிப்புத் தொழில் உலகம். தமிழ் நூல்களின் மதிப்புரைகள் இதில் இடம்பெறுகின்றன. திங்கள் தோறும் வெளியாகும் இவ்விதழின் எணினி வடிவம் தமிழ்நூல்.காம்இல் உள்ளது.
3.8 தமிழ் அச்சுமுகம்
தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தமிழ் மொழியை இணைப்பதே தமிழரின் வளர்ச்சிக்கு வழி. அவ் வளர்ச்சியின் விளைவே தமிழ்நூல்.காம்.
தமிழ் நூல் தலைப்புகளை, உரோம வரிவடிவத்திற்கு ஒலிபெயர்த்துக் கணிப்பொறியுள் இடுவது ஒரு வழி; தமிழ் வரிவடிவத்திலேயே உள்ளிடுவது மற்ற வழி. தமிழருக்குத் தமிழிலேயே தகவல்களைக் கொடுக்க வேண்டு மெனக் கருதித் தளத்தின் உள்ளடக் கத்தை தமிழ் வரிவடிவங்களில் அமைத்தோம்.
கணிப்பொறியின் பொதுத் தளம் உரோம வரிவடிவம். தமிழ் வரிவடி வங்கள் அனைத்துக் கணிப்பொறிக ளிலும் கிடைக்காத காலச் சூழ்நிலை. அதுமட்டுமன்றி, தமிழ் அச்சுமுகங் கள் பல இருப்பினும் அவை ஒன்றுக் கொன்று பொருத்தமின்றி உருவாகி யுள்ளன.
தமிழ்த் தலைப்புகளைத் தரவுத்தளத் தில் தொகுக்கவும் அகரவரிசையாக்க வும் நாம் பயன்படுத்திய SHREE803 என்ற தமிழ் அச்சுமுகம் வாடிக்கை யாளரின் கணிப்பொறியில் இருந் தால், தமிழ்நூல்.காம் தளத்தைத் திரை யில் அவர் பார்த்து வாசிக்க முடியும்.
எனவே SHREE803 அச்சுமுகத்தை தனது கணிப்பொறியிலுள்ள அச்சு முகங்களின் தொகுப்புடன் வாடிக்கை யாளர் இணைக்க வேண்டும்.
இதற்கு, Download Tamil Font என்ற குமிழைச் சொடுக்கி வாடிக்கையாள ரின் கணிப்பொறியிலுள்ள அச்சுமுகத் தொகுப்புக்குள் SHREE803 அச்சு முகத்தை இறக்க வேண்டும்.
அச்சுமுகத்தை இறக்காமலேயே திரையில் தமிழ் வரிவடிவங்களைப் பார்க்கக் கூடிய இயங்கு அச்சுமுக (Dynamic Font) வசதி தமிழுக்கு வந்த பின்பும், தமிழ்நூல்.காம்இல் தட்டச் சுத் தேடல் வசதிக்காக, வாடிக்கையா ளரின் கணிப்பொறிக்குள் SHREE803 அச்சுமுகத்தை இறக்கவேண்டியுள்ளது.
4. பாராட்டுகள்
பதிப்பாளர், வாசகர், ஊடகத்தார் தொடர்ந்து எமது முயற்சியைப் பாராட்டி வருகின்றனர்.
4.1 வாடிக்கையாளர் பாராட்டு
உலகெங்கும், 40க்கும் அதிகமான நாடுகளிலுள்ள எமது வாடிக்கையா ளர் தமிழ்நூல்.காம் வழியாகத் தமிழ் நூல்களை வாங்கி எம்மை ஊக்குவிக் கின்றனர். இவர்கள் வழங்கும் ஆலோ சனைகளும் தொடர்ச்சியான ஆதர வுமே தமிழ்நூல்.காம்இன் வெற்றிக் கும் வளர்ச்சிக்கும் வழி வகுத்து வரு கின்றன.
தமிழ் மீது மாறாத காதல் கொண்டு, தமிழைக் கற்க உதவும் நூல்களையும் அகராதிகளையும் வாங்கும் எமது இனிய யப்பானிய வாடிக்கையாளர் திரு. ஹராய் கியோடாகா, அவற்றைத் தனது நண்பர்களுக்கும் பரிசளித்து வருவதை இங்கு நினைவுகூருகிறோம்.
எமது மின்னம்பல தளத்தையும் எமது சேவையையும் பாராட்டி வாடிக்கை யாளர்கள் அனுப்பிய மின்னஞ்சல் களில் சில வருமாறு:
Subject: More details please
From: madhu@xtra.co.nz
Date: 11.09.99
Hi !!!
Your web site is great. I am interested in Tamil Dramas especially small ones and comedy..Is there any book available? If so could you please let me know the name ? What is the minimum amount of order we could place and how? How much will be the postel & package charges? How to send the money ? I live in New Zealand. I hope you will let me know the details .
With regards
Tulsi Gopal
Subject: appreciation
From: tgkg@hotmail.com
Date:11.09.99
its really a wonderful effort.
govt can sponsor this site.
tgkg@hotmail.com
gocha
Subject: Hi
From: Nambibala@aol.com
Date: 07.11.99
Hi There,
I browsed thro your website, it’s really a nice and great effort; really appreciatable job. Thanks for bringing the Tamil world more connected.
Nambi.
Subject: Re: Problem Encountered.- Thank you!
From: karthi@javanet.com
Date: 08.11.99
Hi,
I am very gald that you responded to my mail immediately. Today I tried saving your attachment and it worked. I was very much impressed with the site. It's excellent. Do continue your service. It's really useful for Thamizh lovers like me around the world. I appreciate your service to Thamizh Thaai. What am I suppose to do to get a book from your site ? How do I pay ? What is the mode of currency ? What do I do to get the book that is not present in your List ?
Regds,
Shanbagam.
Subject: Very good effort.
From: mani@netcore.co.in
Date: 8.11.99
Sir,
I read about your site in a Tamil magazine and browsed today. I really got amazed. It is going to be killer application for the future. Keep up the good work.
K R Mani

Subject: Enquiry on purchase of books from abroad
From: kumaran123@hotmail.com
Date: 12.11.99
Dear Sir,
I visited your web site www.tamilnool.com; really it's a wonderful web site. I want to know whether people like me, who are all staying in abroad, can order for the books or not? I am presently staying in Amsterdam, can you deliver books to my place. If so, please let me know about the cost and payment modes.
Thanks,
Kumaran
Subject: Great stuff
From: arams@hotmail.com
Date: 18.11.99
Hello,
I have just visited your site and found it very interesting. I would like to congratulate each one behind this new idea. I am sure you would be continuously working to improve this site further. I would like to give few comments that might help, though I am sure you would have taken care of these already.
Thanks and regards,
Ramaswamy
Subject: A very good site
From: nagas_baan@chequemail.com
Date: 20.11.99
Hello Sir.,
Just now visited your site. It is a very good one. A neatly organised shelf of Tamil books paarppathu pol oru feeling. This is a great service you are doing to the Tamil people - especially the Tamilians outside Tamil Nadu. Many thanks for that. I need the following book -’Oru Kathavum Konjcham KaLLip paalum’ written by Thamarai.

4.2 ஊடகங்களின் பாராட்டு
இணையத்தில் ஆங்கிலப் புத்தகங் களை விற்கும் பெரிய தளமான அமே சன்.காம் (amazon.com) தளத்திற்கு ஈடாகத் தமிழ்ப் புத்தகங்களை விற் கும் சிறந்த தளம் தமிழ்நூல்.காம் என்று குமுதம் வார இதழ் 1999இல் எம்மை அடையாளம் காட்டியது.
ஜெயா தொலைக்காட்சியில் தமிழ் நூல்.காம் இணைய தளத்தின் பல் வேறு கூறுகளை 2000ஆம் ஆண்டில் விளக்கிக் காட்டினர்.
2002ஆம் ஆண்டு சென்னையில் நடந்த தமிழ் இணைய மாநாட்டில் தமிழ்நூல்.காம்இன் செயல்முறை களை விளக்கி உரையாற்றினோம்.
5. தட்டுவோர்-திறப்போர்
இத்தளம் இருப்பதைத் தெரிந்து தளத்தின் முகப்புப் பக்கத்தை மட்டும் பார்த்து, பின்னர் உள்ளே புகலாம் என உலவச் செல்வோரே தளத்தைத் தட்டுவோர்.
6. பார்வையிடும் பக்கங்கள்
தட்டித் திறந்தோர் 94 பக்கங்களைப் பார்க்க முடியும். இவற்றுள் எந்தப் பக்கத்தை அதிகமாகப் பார்க்கின்றனர் என்ற விவரம் வருமாறு.
தமிழியல் (Tamilology) பக்கங்களையே வெளிநாட்டினர் அதிகமாகப் பார்க் கின்றனர். தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு தொடர்பான நூல்களை அன்னியச் சூழலில் ஆங்கில, பிரெஞ்சு மொழிகள் வழியாகக் கற்க, இந்நூல்கள் உதவுகின்றன. அன்னியச் சூழலில் பிறந்து வளரும் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பண்பாட் டையும் கலாசாரத்தையும் தெரிவிக்க விழையும் தமிழரின் தவிப்பையே இது காட்டுகிறது.
7. விற்பனை
ஒரு வணிகத் தளத்தின் வெற்றிக்கு விற்பனையே அளவுகோல். ஐந்து ஆண்டுகளில் இத்தளத்தின் விற்பனை அளவுகளை வரைடமாகக் காட்டியுள் ளோம்.
8. இனி...
தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இணைந்த தமிழ்ப் புத்தகச் சந்தைப்படுத்தல், நீண்ட நெடும் பயணம். இப்பயணத் தைத் தமிழ்நூல்.காம் சிறப்புறத் துவக் கியுள்ளது. நோக்கம் பெரிது; பாதை நெடிது; முயற்சி கடிது. தொழில்நுட்ப, சமூக வளர்ச்சிக்கேற்ப எச்சூழலிலும் அறிவு வெளிச்சத்தை உலகெங்கும் பரவச் செய்யும் தெளிவான நோக்கத் தைக் கொண்டுள்ளோம்.
தமிழ் நூல்களுடன் துவங்கி, தமிழி யல் நூல்களை அறிமுகப்படுத்தி, தமிழ்க் குறுந்தட்டுகளைச் சந்தைப் படுத்தி, தமிழ்ப் பதிப்புத் தொழிலின் பரப்பைச் செய்தியாக்கி, தொழில் நுட்பத்தின் அடுத்த பயனைத் தமிழு டன் இணைத்து உலகிற்கு வழங்க ஆவலுடன் உள்ளோம்.
நடைமுறைச் சிக்கல்களுக்கு விடை கண்டு தமிழ்நூல்.காம்ஐ வலுப்படுத் தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
n உலாவுனரின் கணிப்பொறிக் குள் தமிழ் அச்சுமுகத்தை இறக்கா மலே தமிழ்த் தளப் பக்கங்களைப் பார்க்க, தமிழில் தட்டச்சுச் செய்துத் தேட, சீர்க்குறித் (Unicode) தொழில் நுட்பம் அறிமுகமாகியுள்ளது. இத் தொழில்நுட்பத்தைத் தமிழ்நூல்.காம் தளத்துடன் இணைக்கும் காலம் வரும்.
n இணையப் பூக்கள் (Web Blogs) மலர்ந்து வருகின்றன. இப்பூக்களு டன் இணைந்து தமிழ்நூல்.காம் மணக்கும்.
n கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதியை வழங்க முயற் சிக்கிறோம்.
n பல்வேறு பதிப்பாளரிடம் உள்ள தமிழ் நூல்களின் இருப்பு நிலையை யும் விலை அளவையைும் தெளி வாக்கி எமது பணியை விரிவாக்கு வோம்.
n தலைப்புகளை மட்டும் தராமல் நூல்களின் ஓரளவு உள்ளடக்கத்தை யும் தமிழ்நூல்.காம் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு நூலுக்கும் கொடுக் கக் கூடிய வாய்ப்பு எதிர்காலத்தில் வரும்.
n தமிழ் நூல்களின் வாசகர் பரப்பை விரிக்கும் நோக்குடன், மின் புத்தகங்களைத் தமிழ்நூல்.காம் தளத் துள் வெளியிடும் வாய்ப்பு வரும். அவ்வாறு வெளிவரும் புத்தகங்க ளின் ஒரு சில பக்கங்களையோ, நூல் முழுவதையுமோ வாடிக்கையாளர் ஒருவர் தன் கணினிக்குள் இறக்கலாம், அச்சுப் படியாக்கலாம்.
n கணிப்பொறி உள்ள அனைவ ரும் தமிழ் நூல்களைத் தேட, வாங்க தமிழ்நூல்.காம்க்கு வர ஏதுவாக விளம்பர வியூகம் வகுப்போம்.
இதுவும் பிறவுமான சிக்கல்கள் தீரும்; தமிழ் நூல் விற்பனை பெருகும்; தமிழ்நூல்.காம் வளரும். ஒளிமய மான எதிர்காலம் எம் உள்ளத்தில் தெரிகிறது.
9. நன்றி
தமிழ்நூல்.காம் மின்னம்பல தளத்தை அமைக்கக் கருதியவர், காந்தளகம் நிறுவனர், மறவன்புலவு க. சச்சிதானந் தன். தொடக்கப் பணிகளை அவரே நேரில் கவனித்தார். தகவல்களைத் திரட்டி, தொழில்நுட்ப உள்ளீடு களைத் தேடித் தொகுத்து, வல்லுநரை அடையாளம் கண்டு, மின்னம் பலத்தை வெள்ளோட்டம் விட்டார்.
விசயதீபன், வெங்கடேசர் இருவரும் மென்பொருள் தளத்தைத் தேவைக் கேற்ப மேம்படுத்தினர். முகப்பு வடி வமைப்பில் மணிமாறனும், தகவல் தள மேம்பாட்டில் பானுரேகாவும் தேவைக்கேற்ப உதவி வந்தனர்.
வாடிக்கையாளரின் புத்தகத் தேவை களைப் பதிப்பாளரிடம் பெற்று, பாது காப்பான பொதிகளாக்கி, வாடிக்கை யாளருக்கு அனுப்பி, இத்தளத்தின் வளர்ச்சிக்காகத் தொடக்கமுதல் இன்று வரை, தளராது அயராது உழைப்பவர் ஆ. சசிகுமார்.
நாம் கேட்கும் நூல்களை உடனுக் குடன் தந்து பதிப்பாளர் உதவினர்.
யாவருக்கும் ஆதரவாக உள்ளுரமாக இருந்தவர் வாடிக்கையாளரே.

உலகப் புத்தகக் காட்சியில் தமிழ்ப் பதிப்புலகம்

உலகப் புத்தகக் காட்சியில் தமிழ்ப் பதிப்புலகம் ஏன் பங்குபற்ற வேண்டும்?
மறவன்புலவு க. சச்சிதானந்தன்


ஐரோப்பாவில் தமிழர் தொகை
(தோராயக் கணிப்பு)
நாடு மக்கள் தொகை தமிழர்
1 அண்டொரா 90,000 25
2 அயர்லாந்து 3,841,000 1,000
3 அல்பேனியா 3,145,000 100
4 ஆஸ்திரியா 8,075,000 500
5 இத்தாலி 57,503,000 5,000
6 உக்ரெயின் 49,112,000 1,000
7 எஸ்ரோனியா 1,377,000 500
8 ஐஸ்லாந்து 281,000 25
9 கிரேக்கம் 10,623,000 5,000
10 குரோசியா 4,655,000 100
11 சானல் தீவுகள் (பிரி.) 145,000 250
12 சான் மறினோ 27,000 25
13 சுலோவாக்கியா 5,403,000 100
14 சுலோவேனியா 1,985,000 100
15 சுவிற்சர்லாந்து 7,170,000 60,000
16 சுவீடன் 8,833,000 10,000
17 செக் 10,260,000 100
18 டென்மார்க் 5,333,000 15,000
19 நெதர்லாந்து 15,930,000 12,000
20 நோர்வே 4,488,000 10,000
21 பரோ தீவுகள் (டென்.) 47,000 .....
22 பல்கேரியா 7,867,000 200
23 பின்லாந்து 5,178,000 3,000
24 பிரான்ஸ் 59,453,000 200,000
25 பிரிட்டன் 59,542,000 250,000
26 பெலாருஸ் 10,147,000 25
27 பெல்ஜியம் 10,264,000 9,000
28 பொஸ்னியா
-ஹெர்சகோவினா 4,067,000 100
29 போர்த்துக்கல் 10,033,000 500
30 போலந்து 38,577,000 500
31 மசிடோனியா 2,044,000 100
32 மான் தீவு (பிரி.) 78,000 25
33 மால்ரா 392,000 500
34 மொனாகோ 34,000 25
35 மொல்டோவா 4,285,000 25
36 யூகோஸ்லாவியா 10,552,000 500
37 ரஷ்யா 114,664,000 10,000
38 ரோமானியா 22,388,000 200
39 லக்செம்போர்க் 442,000 1,000
40 லற்வியா 2,406,000 500
41 லிதுவானியா 3,689,000 200
42 லைச்ரென்ஸ்ரெயின் 33,000 100
43 வத்திக்கான் நகர் 1,000 25
44 ஸ்பெயின் 39,921,000 1,500
45 ஹங்கேரி 9,917,000 25
46 ஜிப்றால்ரர் (பிரி.) 27,000 100
47 ஜெர்மனி 82,007,000 30,000

மொத்தம் 696,331,000 628,975

முன்னிரவு, 9 மணி, வீட்டில் பணியில் இருக்கிறேன்.
வாயிற் கதவு மணி அடிக்கிறது. திறக்கிறேன். வியக்கிறேன். மணிமேகலைப் பிரசுரம் ரவி தமிழ்வாணன்!
வாங்க, வாங்க, என்ன இந்த நேரத்தில், சொல்லாமல் கொள்ளாமல்? நான் கேட்டேன்.
குறையாக நினைக்கவேண்டாம். ஐரோப்பா போகிறேன், புத்தகக் காட்சி நடத்தப் போகிறேன். அதுதான் உங்களைப் பார்க்க வந்தேன். ரவியின் விடை இது.
நான் என்ன செய்யவேண்டும்?
உங்களுக்குத் தெரிந்தவர்களை அறிமுகம் செய்யவேண்டும்.
அவ்வளவுதானே? கட்டாயம் செய்கிறேன்.
யோசித்தேன். உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். விவரத்தை மறுமுனைக்குக் கூறினேன்.
அவரை அங்கேயே இருக்கச் சொல்லுங்கள் எனப் பாரிசில் இருந்து பதில் வந்தது.
ஐந்து மணித்துளிகளில் தொலைபேசி மணி அடித்தது; எடுத்தேன்.
ரவி தமிழ்வாணன் இருக்கிறாரா?
ரவியிடம் தொலைபேசியைக் கொடுத்தேன்.
ஏறத்தாழ அரை மணி நேரப் பேட்டி. ரவியின் பயணம் பற்றிய அத்தனை செய்திகளையும் ரவியிடம் கேட்டனர்.
அன்றிரவே ஐரோப்பா முழுவதும் ரவியின் பேட்டி ஒலிபரப்பாகியது. அடுத்தநாளும், மறுபடி பல முறையும், அப்பேட்டியை ஐரோப்பா முழுவதும் தமிழர் கேட்கக் கூடியதாக ஒலிபரப்பினர்.
தன் பயணத்துக்கு வானொலி மூலம் கட்டியம் கூறினார் ரவி.
நண்பர்கள் பலரின் முகவரிகளைக் கொடுத்தேன்.
தமிழ்ப் பதிப்பாளருக்குத் தலைமை நிலையில் இருப்பவர், கழகம் இரா. முத்துக்குமாரசாமி. மறுநாள் அவரிடம் பேசினேன். ரவியின் ஐரோப்பியப் பயணம் வெற்றிகரமாக அமையத் தமிழ்ப் பதிப்பாளர் வாழ்த்திப் பாராட்ட நிகழ்வு ஒன்றை நடத்தக் கேட்டேன். அவர் உடன்பட்டார்.
சென்னை காஸ்மோபாலிற்றன் கிளப்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. தமிழ்ப் பதிப்பாளர் பலர் கூடி வாழ்த்தி அனுப்பினோம். ரவியின் ஐரோப்பியப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.
கடந்த ஆறு ஆண்டுகளாக ரவி, ஐரோப்பாவில் நடத்திவரும் சாதனை யைத் தமிழ்ப் பதிப்புலகம் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை.
ரவி காட்சி நடத்தாத நாடுகள் ஐரோப்பாவில் இல்லை என்னும் அளவுக்கு, அங்குள்ள தமிழ் எழுத்தாள ரையும் தமிழ் வாசகரையும் ஒன்றிணைத்து ரவி செயற்படுகிறார்; தமிழ் நூல்களை ஐரோப்பியச் சந்தையில் நன்றாக விற்பனை செய்கிறார்.
மணிமேகலைப் பிரசுரத்தின் படையெடுப்புக்கு முன்னரே, ஐரோப்பியச் சந்தைக்குத் தமிழ் நூல்களைக் காந்தளகமும், திருமகள் நிலையமும், பிற சிறு ஏற்றுமதியாளரும் அனுப்பிக் கொண்டிருந்தனர். இலண்டனையும் பாரிசையும் மட்டுமே பெருமளவு நம்பியிருந்த இவ்வேற்றுமதியாளர் காணமுடியாத சந்தைகளை ரவி கண்டார்.
ஐரோப்பியக் கண்டத்தில் 47 நாடுகள் உள. (விவரம் படத்தில்) 70 கோடி மக்கள் வாழ்கின்றனர்.
ஒவ்வொரு 1,000 ஐரோப்பியருள்ளும் ஒருவர் தமிழர். 47 நாடுகளிலும் தோராயமாக ஏழு இலட்சம் தமிழர் வாழ்கின்றனர். (விவரம் அடுத்த பக்கப் பட்டியலில் காண்க)
தெற்காசியாவின் வேறு எந்த மொழி வழி இனமும் இத்தகைய மக்கள் தொகை அடர்த்தி விகிதாசாரத்தில் ஐரோப்பாவில் வாழ்வதில்லை என்பதை உளத்திருத்துக.
ஜெர்மனியில் 300 தமிழ்ப் பள்ளிகள், பிரான்சில் 130 தமிழ்ப் பள்ளிகள், பிரித்தானியாவில் 70 தமிழ்ப் பள்ளிகள், சுவிற்சர்லாந்தில் 50 தமிழ்ப் பள்ளிகள், யாவும் அவ்வவ் அரசுகள் அல்லது உள்ளூராட்சி அவைகளின் மானியத் தொகை பெற்று முறைப்படி நடைபெறுகின்றன.
சைவத் தமிழ்க் கோயில்கள் 100க்கு மேல் ஐரோப்பாவெங்கும் உள; கிறித்தவத் தமிழ்த் தேவாலயங்கள் 50க்கு மேல் உள.
தமிழ்ச் சங்கங்களும், தமிழர் கலாசார அமைப்புகளும் பெரு நகரங்கள் பலவற்றில் உள.
பாரிசில் இருந்து தமிழ் வார இதழ்கள் நான்கும், இலண்டனில் இருந்து இலவயத் தமிழ் வார இதழ்கள் ஆறும் வெளியாகின்றன.
மின்னிதழ்கள் பலவற்றையும், மின் உரையாடு தளங்கள் பலவற்றையும் தமிழ் ஆர்வலர்கள் நடத்திவருவதுடன், மின்னம்பலத் தமிழைப் பாரிய முறையில் வளர்த்தும் வருகிறார்கள். மின்புத்தகங்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்தோர் ஐரோப்பியத் தமிழரே.
பிரான்சிலும் பிரித்தானியாவிலுமாகத் தமிழ்த் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் ஆறும்,தமிழ் வானொலி பரப்புகள் 20க்கும் அதிகமானதாகவும், 24 மணிச் சேவையாக நடைபெறுகின்றன.
பாரிசில் முழுமையான தமிழ்ப் புத்தகக் கடைகள் இரண்டும், இலண்டனில் பகுதி நேரப் புத்தகக் கடைகள் நான்கும், சுவிற்சர்லாந்திலும் ஜெர்மனியிலும் ஸ்கண்டிநேவிய நாடுகளிலும் தமிழர் நடத்தும் தமிழிய மளிகைக் கடைகள் பலவற்றில் தமிழ்ப் புத்தகத் தட்டுகளும் இயங்குகின்றன.
பெருவணிகர்களாகத் தமிழர் பலர் ஐரோப்பாவெங்கணும் உளர். அங்குள்ள தமிழரின் பொருள் வாங்கும் பண வலு, தமிழ்ப் புத்தகங்களை வாங்குவதற்கு மிகையே.
இந்தத் தமிழ்ச் சூழ்நிலையே, மணிமேகலை ரவியின் ஐரோப்பியப் புத்தக விற்பனைப் படையெடுப்புக்கான அடித்தளம். அங்கே ரவி என்ன செய்கிறார் என்பதை விமர்சிக்கும் தமிழர் பலர், அங்கும் உளர், இங்கும் உளர்.
தமிழ் நூல்களுக்காக ஏங்கும் வாசகர், தமிழ் நூல்களைப் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர், இவர்களின் தமிழ்ப் புத்தக விடாயைத் தீர்க்க ரவி உதவுகிறார். வேறு யாரும் அந்த விடாய்க்கு உரிய முறையில் நீரூற்றவில்லை. அதனால் ரவி தளரா வெற்றியைக் கண்டுவருகிறார். வேறு யாராவது ரவியை விடச் சிறப்பாகச் செய்ய முடியுமானால், அத்தகையவரே வெற்றி பெறுவர்.
ரவியின் முயற்சிகள், தரமான எழுத்துகளா? தரமான பதிப்புகளா? இவை நல்ல வினாக்கள்.
தமிழ்ப் புத்தகச் சந்தை ஐரோப்பாவில் இருக்கிறது. இதை ரவியின் முயற்சிகள் உறுதி செய்துள. ரவியின் முன்னோடிப் பணியே, அந்தச் சந்தையின் அகல நீளங்களைப் புத்தக விற்பனையாளருக்கு உணர்த்தியுள்ளது.
அந்தச் சந்தை திறந்த சந்தை என்பதால், ரவியின் முயற்சிகள் மேலுள்ள நல்ல வினாக்களை எழுப்பி உள.
அச்சந்தை தரத்தைத் தேடுகிறது, புதிய முகங்களைத் தேடுகிறது.
இந்தச் சூழ்நிலையை உளத்திருத்தி, பிராங்பற்றில் அடுத்த ஆண்டு அக்டோபரில் நடக்கவுள்ள உலகப் புத்தகக் காட்சியை நோக்க வேண்டும்.
இந்திய அரசின் சிறப்பு அரங்கை, தேசியப் புத்தக அறநிலை, பிராங்பற்றில் அமைக்க உள்ளதால், அந்த அரங்கில் தமிழ்ப் பதிப்புலகம் முழுமையாகப் பங்கு பெற வேண்டும்.
இக்காட்சி பற்றிய அறிமுகக் கட்டுரையைக் கடந்த இதழில் பார்க்க.
ஐரோப்பாவின் இலையுதிர் காலத்தில் நடைபெறவுள்ள இப்புத்தகக் காட்சியில் தமிழ்ப் பதிப்புலகம் கலந்து கொள்ளும் என்ற செய்தியை அங்குள்ள தமிழருக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டால் போதும், தேன் பொந்தை நாடுவோராக, ஐரோப்பாவிலுள்ள தமிழர் பலர், பிராங்பற்றிற்கு வருவர்.
புத்ததக் காட்சியில் கூடுவர், புத்தகங்களை வாங்குவர், புதிய அறிமுகங்களை மேற்கொள்வர்.
வாசகர் - எழுத்தாளர் சந்திப்புகள், எழுத்தாளர் - பதிப்பாளர் சந்திப்புகள், பதிப்பாளர் - விற்பனையாளர் சந்திப்புகள், எனத் தமிழ்ச் சூழல் களைகட்டும்.
தமிழ் எழுத்துகளை ஜெர்மன் மொழிக்குப் பெயர்க்க, பதிப்பிக்க, ஜெர்மனியில் உள்ள சிறு பதிப்பாளருக்கு, இக்காட்சியை ஒட்டி, இந்திய அரசு மானியம் கொடுக்க உள்ளது. தமிழக எழுத்தாளர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டாமா?
சிறு பதிப்பாளராகத் தமிழரும் ஜெர்மனியில் உள்ளதைப் புத்தக காட்சியில் கண்டு, சந்தித்து, தமிழ் எழுத்துகளை ஜெர்மன் மொழியில் வெளியிட முயலவேண்டாமா?
ஐரோப்பா எங்கணும் உள்ள தமிழ் ஊடகங்கள், பிராங்பற்றில் தமிழ்ப் புத்தகக் காட்சி நடக்குமெனின், முழுமையான ஆதரவைத் தந்து, ஐரோப்பியத் தமிழர் அனைவருக்கும் விவரங்களை முன்கூட்டியே தெரிவிப்பதுடன், காட்சி நாள்களில் நாள்தொறும் செய்திகள், நேர்முகப் பேட்டிகள், புத்தகங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடுவார்கள் அல்லவா?
மின்னஞ்சல்களும் மின் உரையாடல்களும் மேலதிக நேரமாகப் பணிபுரிந்து, தமிழருக்கு இந்தச் செய்திகளைப் பரிமாற மாட்டார்களா?
நல்ல தமிழ்த் தலைப்புகளை விற்பனைக்காகத் தேடி, தமிழகம் வர முடியாததால், புழங்கும் எழுத்தாளர்களையும் தலைப்புகளையுமே மீண்டும் மீண்டும் விற்கவேண்டியுளதே எனப் புழுங்கும் நூற்றுக்கணக்கான ஐரோப்பியத் தமிழிய மளிகைக் கடை வணிகருக்கு, பிராங்பற்றில் காட்சியாகும் பன்முகத் தமிழ்த் தலைப்புகள், வாழ்விக்க வரும் அரும் பொருளாகாதா?

யாழ்ப்பாண அகராதியின் மீள்கண்டுபிடிப்பு

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
2,500 ஆண்டுகளின் முன்னர் உரிச்சொற் பனுவல் (தொல்காப்பியம்), 1200 ஆண்டுகளின் முன்னர் திவாகரம், 1000 ஆண்டுகளின் முன்னர் பிங்கல முனிவரின் பிங்கலம், பின்னர் மண்டல புருடரின் சூடாமணி நிகண்டு, கி.பி. 1594இல் இராவணாத்திரியரின் அகராதி நிகண்டு யாவும் நூற்பாவில் தமிழ்ச் சொற்களுக்குத் தமிழில் பொருள் சொல்லித் தொகுத்துத் தரும் முயற்சியில் நாம் அறியக் கூடியதாக உள்ள நூல்கள். இவை தவிரப் பல நூல்கள் நிகண்டு என்ற பெயரில் (உரிச்சொல் நிகண்டு, கயாதரம், பாரதி தீபம், ஆசிரிய நிகண்டு, கைலாச நிகண்டு, பல்பொருட் சூடாமணி, தமிழ் உரிச்சொற் பனுவல், அகராதி நிகண்டு, அரும்பொருள் விளக்க நிகண்டு, நாநார்த்த தீபிகை) நம்மிடையே உள்ளன; மேலும் பல இருந்திருக்க வேண்டும், தேடவேண்டும். தமிழில் அகராதி தோன்றி வளர்ந்த விரிவான வரலாற்றை, எஸ். வையாபுரிப்பிள்ளை மற்றும் மு. சண்முகம்பிள்ளை ஆகியோர் எழுதியுள்ளனர். தொடர்ந்தும் பல ஆராய்ச்சியாளரின் தேடலில் இத்தேடல் பணி விரிவடைந்து வருகிறது.
அகர வரிசையில், உரைநடையில் கி.பி. 1732இல் வீரமாமுனிவர், சதுரகராதியை இயற்றினாராயினும் முழுமையாய் அச்சில் வந்தது கி. பி. 1824இலாம்.
பெயரகராதி எனப் பெயரிட்டு, உடுவில் சந்திரசேகர பண்டிதரும் சரவணமுத்துப்பிள்ளையும் கி. பி. 1842இல் யாழ்ப்பாணத்து மானிப்பாய் அமெரிக்க மிசன் அச்சகத்தில் அச்சிட்டு வெளிவந்த அகராதியே மிகப் பெரிய அகராதி. 58,500 சொற்கள் இந்த அகராதியில் உள. இருபாலை சேனாதிராச முதலியார் உள்ளிட்ட அக்காலத்து யாழ்ப்பாணத்துத் தமிழறிஞர் பலரின் ஆலோசனையைப் பெற்றே இந்த அகராதியை உருவாக்கினர். இந்த அகராதித் தயாரிப்புக்கான முழு முயற்சியையும் அமெரிக்க மிசனறியினரே மேற்கொண்டனர்.
சில ஆண்டுகளின் பின்னர் தமிழ்நாட்டில், களத்தூர் வேதகிரி முதலியார் 6,500 சொற்களைப் பின்னிணைப்பாகத் தொகுத்து இந்த அகராதியை வெளியிட்டார். காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு (கி. பி. 1893), மேலைப்புலோலி நா. கதிரவேற்பிள்ளை (கி.பி. 1901) ஆகியோர் பின்னர் இந்த அகராதியை விரித்துப் பேரகராதிகள் செய்து வெளியிட்டனர். இன்று வரை வெளியாகும் தமிழ் - தமிழ் அகராதிகளுக்கு, உடுவில் சந்திரசேகர பண்டிதரும் சரவணமுத்துப்பிள்ளையும் கி. பி. 1842இல் வெளியிட்ட, மானிப்பாய் அகராதி என்றும் யாழ்ப்பாண அகராதி என்றும் பின்னர் அழைக்கப்பெற்ற அகராதியே அடித்தளம்.
கி. பி. 1842இல் முதல் பதிப்புக் கண்ட, மானிப்பாய் அகராதி என்றும் யாழ்ப்பாண அகராதி என்றும் அழைக்கப்பெற்ற இந்த அகராதியைத் தமிழ் மண் பதிப்பகத்தினர், யாழ்ப்பாண அகராதி என்ற பெயரில், கி. பி. 2006இல் சென்னையில் வெளியிட்டுள்ளனர்.
19ஆம் நூற்றாண்டு வரை, தமிழ் மண்ணில் நிலவிய வட மொழி வல்லாண்மையை இந்த அகராதி சுட்டும். யாழ்ப்பாணத்துச் சொற்கள் மட்டும் கொண்ட அகராதி எனக் கொள்ளற்க. எனினும் ஈழத்து வட்டார வழக்குகளைத் தேடுவோருக்கு இந்த அகராதி சுரங்கம்.
பழைய பதிப்பின் பக்கங்களை நகலெடுத்து வெளியிடும் பிறரின் வழமையைத் தமிழ் மண் பதிப்பகத்தார் பின்பற்றாது, புதிதாக அச்சுக்கோப்புச் செய்து, பிழையறப் பதிப்பித்துள்ளனர். தமிழக, ஈழ நிலவரைப் படங்களை அட்டையில் அமைத்து, நல்ல தாளில், பெரிய எழுத்துகளில், தடித்த மட்டையுடனும், உறுதியான கட்டுடனும் அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். கவிஞர் காசி ஆனந்தன், பேரா. ப. இரா. சுப்பிரமணியன், பேரா. இரா. இளங்குமரனார், தமிழ் ஆர்வலர் பூ. பத்மசீலன், பேரா. கா. சிவத்தம்பி, பேரா. எஸ். ஜெபநேசன், பேரா. எஸ். சிவலிங்கராஜா ஆகியோர் அணிந்துரை வழங்கியுளர்.
இந்தப் பதிப்பில் 500 படிகளைத் தன் முயற்சியால் இலங்கை முழுவதும் சந்தைப்படுத்தும் பாரிய பொறுப்பைக் கொழும்பு, சேமமடு பொத்தகசாலையினர் ஏற்றுக்கொண்டமை, சென்னைத் தமிழ் மண் பதிப்பகத்தாருக்கு மாபெரும் உந்துதலாகும். முதற்பதிப்பின் பழைய படிகளைத் தேடிக் கண்டுபிடித்து, பிழையற அச்சேற்றித் தரமான பதிப்பாகக் கொணர்ந்த பதிப்புச் செம்மல் கோ. இளவழகன், அதைவிடக் கடுமையான பணியான விற்பனையைத் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்ட தமிழ் ஆர்வலர் பூ. பத்மசீலன் ஆகியோருக்குத் தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் கடமைப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெறும் வெளியீட்டு விழாவிலேயே 500 படிகளையும் விற்பனையாக்கி அக்கடமைப்பாட்டை வெளிக்காட்டத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு நல்வாய்ப்பு இவ்வெளியீட்டுவிழா.

திருமுறைகளை அச்சிட்டுப் பதிப்பித்தல்

சிவத்திருத்தொண்டர், கயிலைமணி
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

திருமுறைகளை அச்சிட்டுப் பதிப்பித்தால் மக்களை அவை சென்றடையும். சைவ சமயத்தவர், சைவரல்லாதவர் யாவரும் மக்களே. யாவருக்கும் திருமுறைகள் கிடைக்கவேண்டும்.
திருமுறைகளை வழிபடுவோருக்கு மட்டுமே, அவை சென்றடைய வேண்டும் என்ற கருத்தைப் பழமைவாதிகள் முன்வைப்பர். முற்காலத்தில் அவை பொருத்தமாக இருந்திருக்கும். இக்காலத்துக்கு அக்கருத்து ஒவ்வாது.
திருமுறைகள் மனித சமுதாயத்தின் சொத்து. அவற்றை எவரும் படிக்கலாம், புரிந்துகொள்ளலாம், பின்பற்றலாம், பேறெய்தலாம்.
இந்தப் புதிய சூழ்நிலையில், திருமுறைகளை அச்சிட்டுப் பதிப்பிப்பவருக்குப் பாரிய பொறுப்பு உண்டு. எந்த எழுத்துக் கூட்டலில், எந்தப் பாவடிவில், எந்த ஒழுங்கில் அவற்றை ஆக்கியோர் நமக்கு விட்டுச் சென்றார்களோ அந்த எழுத்துக் கூட்டலில், பாவடிவில், ஒழுங்கில் அச்சிட்டுப் பதிப்பிக்கவேண்டிய பாரிய பொறுப்பு உண்டு.
இதில் கருத்து முரணுக்குகோ, விவாதத்துக்கோ இடமேயில்லை. எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற பழமொழியுடன் அச்சு வேலையா? நச்சு வேலையா என்ற புதுமொழியையும் இணைத்துப் பார்க்க.
திருமுறைகள் தமிழ் மொழியில் தோன்றின. தமிழோ என்றும் இளமை மாறாதுள்ளது. 2,000 ஆண்டுகளுக்கு மேலாக, தொல்காப்பியர் கூறிய அதே 30 எழுத்துகளுடன் இன்றும் தொடர்கின்ற செழுமை உடையது.
பன்னிரு திருமுறைகளும் இந்த 30 எழுத்துகளால் ஆனவைய திருமுறைகள் தோன்றிய காலத்துச் சொற்களுள் 95% இன்றும் அதே பொருளுடன் புழக்கத்திலுள்ளன.
எழுத்து, சொல், பொருள் யாவும் மாறாதிருக்கும் பொழுது, அச்சிடுவோருக்கும் பதிப்பிப்போருக்கும் அவற்றில் மாற்றங்கள் கொண்டுவர உரித்தில்லை.
ஆக்கியோருக்கும் படிப்போருக்கும் இடையே புகுந்து, பேதங்களை, திரிபுகளை, மாற்றங்களைக் கொண்டுவரக் கொஞ்சமேனும் எவருக்கும் உரித்தில்லை. அவ்வாறு மாற்றுவோர் தமிழுக்கு மாறானவராவர்.
சைவ சமயத்துக்குத் திருமுறைகள் அரிய செல்வக் களஞ்சியங்களாக உள்ளன. அதைவிட மேலாகத் தமிழ் மொழிக்கு அவை, சொற் பேழைகளாக, கருத்து வளமூட்டுவனவாக, வரலாற்றுப் பதிவுகளாக, பண்பாட்டுப் பின்புலங்களாக உள.
திருஞானசம்பந்தர் முதலாக, சேக்கிழார் ஈறாக அவற்றை ஆக்கியோர், தமிழுக்கும் சைவத்துக்கும் தந்தோர், அடியாருக்காக அருளியோர் எந்த நிலையில் தந்தனரோ அவையே பன்னிரு திருமுறைகள். சுந்தரர் வழிகாட்ட, நம்பியாண்டார் நம்பி தொகுக்க, சேக்கிழார் நிறைவு செய்து, ஏறத்தாழ 600 ஆண்டு கால அரும் பெரும் மனித முயற்சியே பன்னிரு திருமுறைகள்.
எந்த நிலையில், முறையில், ஒழுங்கில் இந்தத் தலைமுறையில் அவற்றைப் பெற்றோமோ, அவற்றை அப்படியே அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துச் செய்யவேண்டிய பொறுப்பும் கடமையும் எமக்கு உண்டு.
ஏடும் எழுத்தாணியும் அகல, மர அச்சு, ஈய அச்சு, தட்டச்சு, கணினி, எணினி எனத் தொழினுட்பம் வளர்வதால் அவ்வத் தொழினுட்பத்துக்கேற்ப அவற்றை உள்ளவாறே உள்ளிடுதலே பொருந்தும்.
கடந்த பல நூற்றாண்டுகளுக்கூடாக, எறத்தாழ 27 மொழிகளின் தாக்கத்தைத் தாங்கிய தமிழ், இன்றும் இளமை குன்றாதிருக்கின்றது, தனித்தன்மை மாறாதிருக்கின்றது. பன்னிருதிருமுறைளை யாத்தோர் காலத்திற்குப் பின் வடமொழி, அரபு, பாரசீகம், உருது, மராட்டியம், தெலுங்கு, கன்னடம், போர்த்துக்கீசம், ஒல்லாந்தம், பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழியாளரின் ஆதிக்கங்கள் வந்து போயின. பன்னிரு திருமுறைகள் அப்படியே இருக்கின்றன.
அவற்றை மந்திரங்கள் என்றும், வழிபாட்டுக்குரியன என்றும் நம்முன்னோர் போற்றிப் பாதுகாத்தமையின் காரணம், இந்தத் தாக்கங்களால் கேவலர் அவற்றைச் சிதைத்துவிடக் கூடாதென்பதற்காகவே.
ஆங்கிலேய மேலாதிக்கம் ஒழிந்த பின்பும் அடிமை மோகமும் ஆங்கில மாயையும் மயக்கமும் கொண்ட கேவலர் பலர் இருப்பதால், பன்னிரு திருமுறைகள் சிதைந்து வெளிவருகின்றன.
கம்பராமயைணம் போன்றன வெள்ளிப் பாடல்கள் நிரவி நிற்க, பன்னிரு திருமுறைகள் பாடபேதங்கள் பலவின்றியே பதிப்பாகி வருவது தமிழரும் சைவரும் பெற்ற பேறு.
இக்காலத்தில் பன்னிரு திருமுறைகளைப் பதிப்பிப்போர், அவை மக்களைச் சென்றடைய வேண்டுமென்ற காரணத்தை உளத்திருத்தி, பதம் பிரித்தும், நிறுத்தக் குறிகளை இடையிட்டும், பாவடிவைச் சிதைத்தும், அச்சளவுகளுக்கு ஏற்றவாறு ஒழுங்கமைத்தும், முதல் ஏழு திருமுறைகளையும் நம்பியாண்டார் நம்பியின் ஒழுங்கமைவுக்குப் புறம்பாகவும் பிற சிதைவுகளுடனும் வெளியிடுகின்றனர்.
அத்கையோரின் நோக்கங்கள் உயர்ந்தன. திருமுறைகள் பரவவேண்டும், மக்களின் வாழ்வுடன் கலந்து, வாழ்க்கை நிலை உயர்ந்து பிறவிப் பேறெய்த வேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்கு அவர்களுட் சிலருக்கு உண்டு. நம்முன்னோர் விட்டுச் சென்றதை நாமனைவரும் பகிர்ந்து பயனடைவோம் என இயந்திரகதியில் பதிப்பிப்போரே பலர். திருமுறைகளைப் பதிப்பித்து வெளியிட்டுப் பொருளீட்டமுயல்வோர் சிலர்.
பன்னிரு திருமுறைப் பாடல்களில் சிலவற்றைத் தேர்ந்து பெயர்த்து எடுத்து, திரட்டுகளாக, தொகுப்புகளாக, மாலைகளாக வெளியிடுவோரே எண்ணிக்கையில் அதிகமானோர். தமக்கு விருப்பமான, உகந்த, தெரிந்து பயின்று பழகிய பாடல்களை இவர்கள் அச்சிட்டுப் பதிப்பிக்கின்றனர்.
தமிழ் வரிவடிவங்களைக் கற்கமுடியாத, ஆனால் தமிழ்ப பனுவல்களையே வழிபாட்டுக்குரியதாதக்க விழையும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழரும், தமிழரல்லாதோரும், இத்தகையோருக்காகத் தமிழ் வழங்கும் நாடுகளில் உள்ளோரும் திருமுறைப் பாடல்களின் ஒலிபெயர்ப்புகளை அச்சிட்டு வெளியிட்டு வருகின்றனர். கன்னடம், தெலுங்கு, மலையாளம், சிங்களம், இந்தி, வடமொழி, ஆங்கில மொழிகளில் ஒலிபெயர்ப்புகள் வெளிவந்தவாறு இருக்கின்றன.
இவர்களைவரின் நோக்கங்களில் குறைகாண முடியாதெனினும், இவர்களின் பதிப்புகள் மூலங்களைச் சிதைத்து வருகின்றன. கால்ப்போக்கில் எது மூலம்? எது திரிபு? எனக் காணவியலாதவாறு மயக்கமேற்படுவது தவிர்க்கமுடியாது.
மூலங்களைச் சிதைக்காமலே, திருமுறைகளைப் பரப்பலாம், மக்களிடம் கொண்டு செல்லலாம் என்பதற்குப் பல எடுத்துக் காட்டுகள் உள. இரண்டை மட்டும் இங்கு தருகிறேன்.
திருப்பராய்த்துறை தபோவனம் சுவாமி சித்பவானந்தர் அச்சிட்டுப் பதிப்பித்த திருவாசகம் மூலமும் உரையும் நூலைப் பார்க்க. முதலில் மூலப் பாடல் உள்ளது உள்ளவாறே அச்சாகியுளது, பின்னர் அதே பாட்டைச் சுவாமி சிவானந்தர் புரிந்து கொண்டவாறு பதம் பிரித்து அச்சாகியுளது. அதையடுத்து அதற்கு அவர் எழுதிய உரை உள்ளது.
உள்ளம் கவர் கள்வன் எனத் தொடங்கி, கி. வா. ஜகந்நாதன் தொடராகப் பல நூல்களை எழுதினார். திருமுறைகளை மக்களுக்கு எடுத்துச் செல்வதே அவரின் நோக்கம். முதலில் உரைநடையில் விளகம் சொல்லி, இறுதியில் பாடல் இது எனக் காட்டுகையில் மூலம் சிதையாப் பாடல்கள் சிலவற்றைத் தந்து சென்றுள்ளார்.
நிறுத்தக் குறிகளை மூலத்துள் நுழைப்பது முறையல்ல. பதம்பிரிக்கையில் அடைப்புக் குறிக்குள் சந்திகளை நுழைப்பதும் முறையல்ல. சீர் ஒழுங்கைக் குலைத்து அச்சிடுவது, பாவடிவை மாற்றும்.
நம்பியாண்டார் நம்பி பண்முறையிலேயே தொகுத்தார். வேறு ஒழுங்கை அமைப்பவர் அப்பதிப்பைத் திருமுறைப் பதிப்பு என அழைப்பதும் முறையல்ல. திரு-முறை என முறை வகுத்த ஒன்றுக்கு வேறு முறை வகுக்கையில் வேறு தலைப்பிடுவதே பொருத்தம்.
திருமுறைகளை மேற்கோள் காட்டுகையில் மூலம் கெடாது, உரிய சுட்டலுடன் காட்டவேண்டிய பொறுப்புண்டு.
பன்னிரு திருமுறைகள் நம் கைகளில் தவழ்வதும், நம் நா ஒலிப்பதும், நாம் அச்சிட்டுப் பதிப்பிக்க வாய்ப்பாக இருப்பதும் நம் தவம். அவற்றைச் சிதைத்துப் படிப்பதோ, அச்சிட்டுப் பதிப்பிப்தோ நமக்கு அவம்.

இடையீடற்ற வரலாறு ஈழத்தில் தமிழருக்கு உண்டு

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

இசக்கியம்மன், இசக்கிமுத்து என்ற பெயர்கள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வழக்கில் உள. இயக்கியின் மரூஉ இசக்கி.
நாகராசா, நாகலிங்கம் என்ற பெயர்களுக்குத் தமிழரிடையே குறைவில்லை. நாகர்கோயில், நாகப்பட்டினம் யாவும் தமிழரூர்கள்.
இயக்கரும் நாகரும் முற்காலத்தில் தமிழகம், மற்றும் இலங்கை முழுவதும் பரந்து வாழ்ந்தனர்.
இயக்கச்சி, இயக்கர்கல், இயக்கர்களப்பு, இயக்கரை, இயக்கரூர், இயக்கவாவி போன்ற ஊர்ப் பெயர்கள் பல, இலங்கை முழுவதும் இன்றும் வழக்கில் உள்ளன.
நாகதேவன்துறை, நாகபடுவான், நாகமடு, நாகமலை, நாகர்கோயில், நாகர்முனை, நாகன்தாழ்வு யாவும் இலங்கையின் ஊர்ப்பெயர்களுட் சில.
இயக்கர்கள் கூடி, முருகனுக்குரிய தைப்பூசத் திருவிழாவைக் கார்த்திகைக் கமத்தில் (கதிர்காமத்தில்) கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாளன்று, புத்தர் இலங்கைக்கு முதன் முதலில் வருகிறார். இயக்கரிடையே தமது கொள்கைகளைப் புத்தர் போதிக்கிறார். இயக்கருட் பலர் புத்தராகின்றனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில், நாக மன்னர்களின் ஆட்சிக் காலம். யாழ்ப்பாணக் குடாநாட்டில், மாமன் மகோதர மன்னனுக்கும் மருகன் குலோதர இளவரசனுக்கும் பகை வளர, இருவரும் போருக்குத் தயாராகின்றனர். அப்பொழுது இரண்டாவது முறையாக இலங்கைக்குப் புத்தர் வருகிறார். நாக அரச குடும்பத்திடையே போர் வராது காக்கிறார்; தன் கொள்கைகளைப் போதிக்கிறார். நாகர்களுட் பலர் புத்தராகின்றனர்.
அக்காலத்தில் தென்மேற்கே, கல்யாணியில் அரசமைத்து ஆட்சிசெய்த நாக அரசன் மணியக்கிகன்.
நாகர், இயக்கர் பற்றிய இச் செய்திகள் மகாவமிசத்தில் உள. யாழ்ப்பாணத்துக்குப் புத்தர் வந்த செய்தி மணிமேகலையிலும் உண்டு.
நாகர்களும் இயக்கர்களும் தமிழர். இலங்கையில் புத்த சமயிகளாக மாறியோர் முதலில் இயக்கர், பின்னர் நாகர். மகாவமிசம் கூறும் விசயனும் தோழர்களும் இலங்கைக்கு வரும்பொழுது அங்கே தமிழர் பரந்து வாழ்ந்து கொண்டிருந்தனர். சிவ, முருக வழிபாட்டினராயிருந்தனர். அரசு அமைத்து வாழ்ந்தனர். நாகரிகமடைந்த மக்களாயிருந்தனர்.
இலங்கையின் ஆதிகுடிகள் தமிழரே. எல்லாளன் போன்ற பல தமிழ் அரசர்கள் இலங்கை முழுவதையும் ஆட்சிசெய்த வரலாறுகள் உண்டு.
இலங்கையின் வன்னிப் பகுதியில், அடங்காப் பற்றில் ஆட்சிசெய்த தமிழ் அரசன் பண்டார வன்னியன், ஆங்கிலேயரிடம் 1811ஆம் ஆண்டு போரில் தோற்கும் வரை, தொடர்ச்சியாகத் தமிழ் அரசரின் ஆட்சி இலங்கையில் நடைபெற்று வந்தது.
அந்த நீண்ட வரலாற்றை அறிந்து கொள்ள விழைவோர் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையின் யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற இந்த நூலையும் கட்டாயம் படிக்க வேண்டும்.
இந்த நூலை எழுதிய காலத்தில் போதிய வரலாற்றுச் சான்றுகளோ அதை ஒட்டிய ஆய்வுகளோ இருக்கவில்லை; தொல்பொருள் சான்றுகளைப் பெறமுடியவில்லை. செவிவழிச் செய்திகள், பரம்பரைக் கதைகள், கைலாய மாலை போன்ற சில இலக்கியச் சான்றுகள் இந்த நூலாக்கத்துக்குத் துணைபுரிந்துள.
ஆதலாற்றான், கால ஒழுங்குகளை நூலாசிரியரால் துல்லியமாகக் கடைப்பிடிக்க முடியவில்லை. மகாவமிசத்துக்குத் தமிழ்மொழிபெயர்ப்பு இந்நூலாசிரியர் காலத்தில் இருந்திருப்பின் அதனுடன் ஒப்புநோக்கி அவர் பார்த்திருப்பர். சங்க இலக்கியங்களையும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளையும், பின்வந்த இலக்கியங்களையும் நூலாசிரியர் தெரிந்து வைத்திருக்கிறார்.
அதனால்போலும் பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியதாக இன்று கூறப்படும் ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கூறியுள்ளார்.
வரலாற்றை எப்பொழுதும் எவரும் முழுமையாக எழுத முயலமுடியாது. காலத்துக்குக் காலம் கிடைக்கும் புதிய சான்றுகள், முன்னர் எழுதியவற்றை முழுமையாக மாற்றிவிடக்கூடியன. அதற்காக, வரலாற்றை எழுத முயலாமல் இருக்கவும் முடியாது. அந்தக் கண்ணோட்டமே, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையின் அரிய முயற்சி. தனக்குத் தெரிந்தவற்றைத் தான் செவியுற்றதை, தான் கண்டதை ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை நமக்காக விட்டுச் சென்றுள்ளார்.
இக்காலத்தில், போரசிரியர்கள் இந்திரபாலா, பத்மநாதன், சிற்றம்பலம் ஆகியோர் ஈழத் தமிழர் வரலாறு பற்றி எழுதிய நூல்கள், இக்காலம் வரை கிடைத்த சான்றுகளின் அடிப்படையிலானவை. அவர்களின் நூல்களில் கற்பனைச் செய்திகள் சான்றாகமாட்டா. ஆனால் ஆ. முத்துத்தம்பிப் பிள்ளையோ கற்பனைச் செய்திகளைச் சான்றாக அள்ளித் தெளித்துள்ளார். ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை கூறிய பல செய்திகள் கற்பனைகளல்ல, நிகழ்ந்தவைகளே என வருங்கால ஆய்வாளர் நிறுவக் கூடும்.
ஆதிகுடிகளான இயக்கர், நாகர் முதலாக, கடந்த நூற்றாண்டின் பொன்னம்பலம் இராமநாதன் ஈறாக, ஈழத் தமிழருக்கு இடையீடற்ற தொடர்ச்சியான வரலாறு இருந்ததை ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை வலியுறுத்துகிறார். 1619இல் நல்லூரில் போர்த்துக்கேயரிடமும், 1811இல் வன்னியில் ஆங்கிலேயரிடமும் போரில் தமிழீழ அரசாட்சியை இழந்த நிகழ்ச்சிகளை விரிவாக விவரிப்பதன் மூலம், மீண்டும் தமிழீழ அரசை அமைக்குமாறு ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை தன் சந்ததியினருக்கு ஆணையிட்டுள்ள முயற்சியாகவே இந்த நூலைக் கருதலாம்.
அனைவரும் படிக்கவேண்டிய நூல்.
அறிவுக் களஞ்சியங்களாக, வரலாற்றுப் பெட்டகங்களாக, தமிழ்ப் பொழில்களாக விளங்கும் அரிய நூல்கள் பலவற்றைச் சிறப்பாக, தரமாகப் பதிப்பித்து வேகமாக விற்பனையாக்குவதில் பெரு வெற்றி கண்டுவரும் உரத்தநாடு இளவழகனார், தம் தமிழ்மண் பதிப்பகத்தின் மூலம் இந்த நூலைப் பதிப்பித்து ஈழத்தமிழருக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
சென்னை, மார்கழி 2036.